மேலும் அறிய

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

’’வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும்,  வாய்க்கால்களில் தண்ணீர் வராததால்,  பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை  கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர்.


நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கிற்கு மேல் வந்ததால், பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். அறுவடை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், கடந்த 16 ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் இன்று வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. 

இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா, பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில், விவசாயிகள்  அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டை  நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு மலைபோல் குவித்து வைத்துள்ளனர். கடந்த 12 நாட்களாக காத்திருந்தும் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் இரவில் பெய்யும் மழையில் நெல்மணிகள் நனைந்து  முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடிக்காக செய்த செலவு மிஞ்சுமா என்று வேதனையுடன் காத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, உடனடியாக அறுவடை நடைபெறும் கிராமங்களில் நேரடிநெல் கொள் முதல் நிலையத்தை திறந்து போர்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் இரவு நேரங்களில் பெய்யும் மழையில் நனைந்து, அனைத்து நெல் மணிகளும் பதறாகி விடும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.


நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

இது குறித்து  தஞ்சாவூர் மாவட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பாஸ்கர் கூறுகையில், ஒரத்தநாடு தாலுக்கா பகுதிகளில் நெல்மூட்டைகளை கொள் முதல் செய்யவில்லை. பொன்னாப்பூர், கண்ணந்குடி, மேலையூர், கிழையூர், புதுார், பேய்கரும்பன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையத்தில் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்கள்.  ஆனால் ஆட்சியாளர்கள், விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி வாங்குகிறார்கள். மேலும் கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்களாக வருபவர்கள், பிஈ,, டிகிரி, பொறியியல் படித்தவர்களாக பணிக்கு வருவதால், அவர்களுக்கு விவசாயிகளின் நிலை தெரியாததால், வேலைக்கு சேர்வதற்கு ஆணை வாங்கி கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒரத்தநாடு தாலுக்காவில் ஒரு சில கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்கள் வந்தாலும், சில மூட்டைகளை கொள் முதல் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். திமுக ஆட்சி மேல் பொது மக்களிடையை தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரத்தநாடு தாலுக்காவில் சுமார் ஒரு லட்சம் தேங்கியுள்ள நிலையில், இரவு பெய்யும் மழையினால், அனைத்து நெல் மணிகளும் நனைந்துவிடுகிறது. தற்போது பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்து விட்டன. கொள்முதல் நிலையம் திறந்து விற்பனை செய்வதற்குள், அனைத்து நெல் மணிகளிலும் நாற்றுக்கள் முளைக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, கொள்முதல் நிலைய அதிகாரிகளை மாற்றம் செய்த நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், போர்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும், தவறும் பட்சத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளின் நிலை கேள்வி குறியாகும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget