மேலும் அறிய

நெல் கொள்முதல் செய்ய காலதாமதம்... காத்துக்கிடக்கும் விவசாயிகள் வேதனை

தஞ்சை மாவட்டம் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் நெற்பயிர்கள் முளைத்து வருகின்றன

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் டன் கொள்முதல் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி முடிந்து அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ குறுவை சாகுபடி அறுவடை செய்யும் பணிகள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஆவதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்வதால் நெல்மணிகள் முளைத்து பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் மாவட்டத்தில் காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வேகன்கள் மூலம் வெளி மாவட்டத்திற்கு அனுப்பும் நெல் மூட்டைகளை பார்வையிட்டு நெல் கொள்முதலில் தாமதம் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் என்று தெரிவித்து சென்றார். 

இதையடுத்து பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளை நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வம் பார்வையிட்டு நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம்  மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் மெட்ரிக் டன் கிடங்குகளுக்கும் அரவை மில்லுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, மீதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பு உள்ளது. கடந்தாண்டு 95 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகியுள்ளது. இந்த சீசனில் இன்னும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் அறுவடை ஆகாமல் உள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் இரண்டு லாரிகள் அனுப்பப்பட்டு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஒன்றரை மடங்கு வேலை அதிகமாகி உள்ளது. 

இந்த ஆண்டு 3 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தனியார் குடோன்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்படுகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும்  80 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது என்றும் பிற மாவட்டங்களான திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 7 ஆயிரம் மெட்ரிக் டன் சாலை வழியாகவும், இரயில் மூலம் 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இதுவரை அனுப்பி உள்ளதாகவும் கூறினார்

இதனிடையே தஞ்சை மாவட்டம் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் நெற்பயிர்கள் முளைத்து வருகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வந்து சென்ற பிறகு தான் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஆட்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இங்கு ஆய்வு செய்ய வருவார் என்று நேற்று நீண்ட நேரம் காத்திருந்தோம், அவர் வரவில்லை. எங்களது நிலமை கவலை அளிப்பதாக உள்ளது என்று விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர். 

பாதிக்கப்பட்ட காட்டூர் பகுதிக்கு தமிழக துணை முதலமைச்சர் செல்லாததால் மிகப்பெரிய விவசாயிகள் அதிருப்தி அடைந்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிடாத முதல்வருக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் நாங்களும் ஆளுங்கட்சி தான் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget