மேலும் அறிய

தனியாருக்கு தாரை வார்க்காதீர்கள்... தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: எதற்காக?

போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: மினி பேருந்துகள், மின்சார பேருந்துகள், பணிமனைகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மத்திய அரசின் தனியார் மயம் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருவதை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பாக இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் போக்குவரத்து மத்திய சங்கத் தலைவர் என். சேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கௌரவத் தலைவர் கே. சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார்   துவக்கி வைத்து உரையாற்றினார். போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர்ப்புற வழித்தடங்களில் மினி பேருந்துகளுக்கு தாராளமாக அனுமதி அளித்தன் விளைவாக கழகங்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகளையும்,  பேருந்துகளை பராமரிப்பதற்காக தண்டையார் பேட்டை, வியாசர்பாடி உட்பட நான்கு பணிமனைகளையும் தனியாருக்கு கொடுத்துள்ளது. தற்போது தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் தாராளமாக இயக்கலாம் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.  தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களே மினி பேருந்துகளையும், மின்சார பேருந்துகளையும் ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களில் தனியார் மய நடவடிக்கைகள் முற்றிலும் கைவிட வேண்டும்,  நடத்துனர், ஓட்டுனர்,தொழில் நுட்ப பணியாளர், அலுவலகப் பணியாளர், பாதுகாவலர், உணவகம் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், நிரந்தரப் பணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து தேர்ச்சி பெற்று காத்திருக்கும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும்.

1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள டிரஸ்ட் கழக பென்ஷன் திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடந்த 2024 ஆகஸ்ட் முதல் 20 25 டிசம்பர் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி எஸ்.ராமசாமி, ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் டி.சந்திரன்,என்.ஆர். செல்வராஜ், என்.ராஜேஷ் கண்ணன்,  ஆர்.ரங்கதுரை, டி.செந்தில் ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் டி.கஸ்தூரி, அ.இருதயராஜ், எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
நாச்சியார்கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம்
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
தஞ்சாவூரில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய கலெக்டர் அதிரடி! முதல் வாக்காளர்கள் உறுதிமொழி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Embed widget