மேலும் அறிய

தேசிய அளவில் அசத்தல் - வெற்றிக்கு பின்னணி யார்? தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் கூறியது என்ன?

மாநகரில் குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடை உடைப்பு, கழிவு நீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக கட்டுப்பாட்டுறையில் இருந்தவாரே அந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.

தஞ்சாவூர்: தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக முதலிடம் பெற மக்கள் கொடுத்த ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறை மூலம் மாநகராட்சியில் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மதிப்பீடு அடிப்படையில் தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக முதலிடம் பெற்றுள்ளதாக, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 246 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறையின் இணைக்கப்பட்டுள்ளது. 


தேசிய அளவில் அசத்தல் - வெற்றிக்கு பின்னணி யார்? தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் கூறியது என்ன?

மாநகரில் குடிநீர் பிரச்சினை, புதை சாக்கடை உடைப்பு, கழிவு நீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக கட்டுப்பாட்டுறையில் இருந்தவாரே அந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியும். இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டு, அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி  2024-2025-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் அதன் முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14 -வது இடத்தையும் பெற்று அசத்தியுள்ளது.

இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியின் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புதைசாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, குப்பை அகற்றுதல், பொது அறிவிப்பு போன்றவை கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறது. அதே போல் மாநகராட்சியை தொடர்பு கொள்ள அலுவலக  நாட்களில் இலவச டோல்ப்ரி எண் 1800425 1100  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, குறைகள், நிறைகள் எடுத்துக் கூறப்படுகிறது. தினமும் 300 அழைப்புகள் வருகிறது. இதில் 90 சதவீதம் வரை நிவர்த்தி செய்யப்படுகிறது.

மேலும், மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளில் குடிநீர் தினசரி பயன்பாடு குறித்தும், தெரு மின் விளக்குகள், சோலார் மின் விளக்குகள் பயன்பாடு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் தணிக்கை செய்யப்பட்டு அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 41 -வது இடத்தில் இருந்தது. தற்போது 14 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். அதே போல் தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த பெருமைக்கு முக்கிய காரணம் தஞ்சாவூர் மக்களின் முழு ஒத்துழைப்பு, கூட்டு முயற்சியும்தான் காரணம். இந்த நேரத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர்கள் டி. புண்ணியமூர்த்தி, எஸ்.சி. மேத்தா, ரம்யா சரவணன், பொறியாளர் சாம் ஸ்டெல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Embed widget