மேலும் அறிய

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு: முன்னாள் அமைச்சர் மோகன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் குற்றம் சாட்டி பேசினார்.

தஞ்சாவூர்: தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் குற்றம் சாட்டி பேசினார்.

தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சாரபில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், ரத்தினசமி, ராமநாதன், தவமணி, ராமச்சந்திரன், இளமதிசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு..க அமைப்பு செயலாளருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மீறி மின்கட்டணத்தை உயர்த்தினர். அதேபோல் பால் விலையை உயர்த்தினர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தெரிவித்தனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். இதை எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் பால் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது. 11 மருத்துவக்கல்லூரி, 6 சட்டக்கல்லூரி, 25-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன.

காவிரி பிரச்சினையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி நமது உரிமையை நிலைநாட்டினார். எடப்பாடி பழனிசாமி, காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், சாமிவேல், கலியமூர்த்தி, இளங்கோவன், சூரியநாராயணன், சோழபுரம் அறிவழகன், அசோக்குமார், மதியழகன், மலை.முருகேசன், முருகானந்தம், துரைமாணிக்கம், அருணாசலம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
TVK Vijay: ”அராஜகப் போக்கு! மனசாட்சி இருக்கா” தூய்மை பணியாளர்கள் கைது... சாட்டையை சுழற்றிய விஜய்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி.. Comet முதல் Gloster வரை.. ஆஃபர்களை அள்ளித்தந்த MG
ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி.. Comet முதல் Gloster வரை.. ஆஃபர்களை அள்ளித்தந்த MG
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Embed widget