மேலும் அறிய

தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோயில் இடிப்பு

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக  பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது

தஞ்சை மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த புரட்சித் தலைவி  அம்மா ஆலயம்  என்ற கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். இவரது உடல் மெரீனா  கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவகம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த இடத்தை ஒரு கோயிலாக பாவித்து தினமும் அதிமுகவினர் ஜெயலலிதாவை வணங்கி வருகின்றனர்.


தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோயில் இடிப்பு

இந்நிலையில், இதன் உச்சகட்டமாக தஞ்சையில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளார். தஞ்சை மேலரத வீதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் சிலை வைத்துள்ளார்.தற்போது அந்த சிலை அருகே 130 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதாவுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என பெயரிட்டு, 'மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகத்தை பொறித்துள்ளார். தற்போது இந்த கோவிலில் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக  பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் தேரோடும் வீதிகள் ஆன மேல வீதி, தெற்கு வீதி, வடக்குவீதி, கீழராஜவீதி மற்றும் தெற்கு அலங்கம் ஆகிய வீதிகளில் சாலை சீரமைக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய மூன்று வீதி சாலைகளை அகலப்படுத்தி, மழை நீர் செல்லும் வகையில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது.


தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோயில் இடிப்பு

இந்த மூன்று வீதி சாலைகளில் 1.9 மீட்டர் அகலம் முதல் 2.5 மீட்டர் வரை நடைபாதை அமையவுள்ளது.  நான்கு தெருக்களிலும் தேர் ஓட்டப்படும் போது தெருக்களின் தன்மை மற்றும் கோவில் திருவிழாக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சாலைஅமைக்கப்படுகிறது. வடக்கு பிரதான வீதி நடைபாதைகள், சாலை ஓர வடிகால்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான பிரத்யேக இடத்துடன் தரமான 3 வழிச்சாலை வண்டிப்பாதை கட்டமைப்பாக மேம்படுத்தப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட கூடுதல் நிலம் பார்க்கிங் இடமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நடைபாதையிலும் வழக்கமான குறுக்குவெட்டுகளில் நடைபாதை வடிகால் மற்றும் பயன்பாடுகளும் உள்ளன. அனைத்து சாலைகளில்,  அடையாளம், விவரக்குறிப்புகள்,  அலுமினிய தட்டுக்கு மேல் பொருத்தப்பட்ட நவீன ரிப்லெக்டிவ் ஷீட் உடனும்,  இரும்பு, குழாய்களில், அடையாளங்கள், அறிகுறிகள் வைக்கப்படவுள்ளது.

இந்த அடையாளங்களில், சாலை மையம், விளிம்பு கோடு, தொடர்ச்சி கோடு,  நிறுத்த கோடு,  வழி கோடுகள், மூலைவிட்ட-செவ்வகரான் அடையாளங்கள் மற்றும் வரிக்குதிரை போல் வௌ்ளை கோடுகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. சாலை குறியீடுகள் மிகவும் பொருத்தப்பட்ட அதி நவீன தெர்மோபிளாஸ்டிக் வண்ணப்பூச்சுகளுடன் கண்ணாடி விவரங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி வைக்கப்படுகிறது. இரவு நேரம் மற்றும் ஈரமான வானிலையில் பார்வைத்திறனை மேம்படுத்த பிரதிபலிப்பு ஸ்டட்கள் வழங்கப்பட வேண்டும். இவை  நவீன ரெட்ரோ ரிப்ளெக்டிவ் வகையில் அமைக்கப்படுகிறது.


தஞ்சையில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோயில் இடிப்பு

மின்தேக்கிகள் மற்றும் தானியங்கி சென்சார்   மற்றும் வெளிச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் அதே நேரத்தில் குறைந்தபட்ச மின்சக்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் திறமையான மற்றும் நவீன விளக்கு சாதனங்கள் வைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொருத்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சரியான வழியில் தோட்டங்கள் வைக்கப்படுகிறது.இதற்காக தஞ்சை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மேல வீதி, கொங்கனேஸ்வரர் கோவில் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என்ற பெயரில்  கோவில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோவில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி  பொக்லைன் எந்திரம் மூலம் இந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget