மேலும் அறிய

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் - பழ.நெடுமாறன்

இலங்கையில் வாழக்கூடிய சிங்கள மக்களே, இனப்படுகொலை செய்தவர்களை அந்நாட்டை விட்டு விரட்டிவிட்டனர். சிங்கள மக்களுக்கு இருந்த இந்த உணர்வு உலக நாடுகளுக்கு வரவில்லை.

தஞ்சாவூர்: இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற மே 18 தமிழினிப் படுகொலை நாள்  14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினோம். 14 ஆண்டுகள் கடந்தாலும் கூட இனப்படுகொலைக்கு காரணமானவர்களை உலகம் இன்னும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.

ஆனால், இலங்கையில் வாழக்கூடிய சிங்கள மக்களே, இனப்படுகொலை செய்தவர்களை அந்நாட்டை விட்டு விரட்டிவிட்டனர். சிங்கள மக்களுக்கு இருந்த இந்த உணர்வு உலக நாடுகளுக்கு வரவில்லை. எனவே, இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் எங்கே இருந்தாலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்துவதற்கும், தண்டிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா முன்நிற்க வேண்டும்.

உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராஜீவ் காந்தி கொலையில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக தூக்கு தண்டனை விதித்தது. இவர்களில் 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மீதமிருந்த 7 பேரும் இப்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஈழத்தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்த பிறகு, அவர்களைச் சிறப்பு முகாம் என்ற சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது. எனவே, இவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ. நெடுமாறன் தலைமையில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் அய்யனாபுரம் சி. முருகேசன், துரை. குபேந்திரன், ந.மு. தமிழ்மணி, புலவர் துரை. மதிவாணன், சு. பழனிராஜன், பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் நீதிக் கட்சி சுப. இளவரசன், வழக்குரைஞர்கள் அ. நல்லதுரை, பானுமதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பேராசிரியர் வி. பாரி வரவேற்றார். நிறைவாக, பொறியாளர் ஜோ. கென்னடி நன்றி கூறினார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. இப்போரில் இலங்கையில் இருந்த தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மே 18ம் தேதி தமிழினப் படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget