மேலும் அறிய

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர்

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக,  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிபபாளர் ரவளிப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சோதனை நடத்தினர். அப்போது, ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சம்பவ இடத்தை வல்லம் டிஎஸ்பி பிருந்தா நேரில் பார்வையிட்டு, தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார், 6 பேரையும் கைது செய்யவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.


தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

இதுகுறித்து போலீஸார்  நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (41) என்பவர், துலுக்கம்பட்டியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான மேற்படி இடத்தை, மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் என வாய்மொழியாக ஒப்புக்கொண்டு வாடகைக்கு எடுத்து கடந்த 4 மாதங்களாக அங்கே போலி மதுபான ஆலை நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. அதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து மதுபானங்கள் தயாரித்து, போலியாக நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

மேலும், இப்போலி மதுபான ஆலையில் தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த சே.அறிவழகன் (30), மாரியம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (33), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த செ.முத்துக்குமார் (29), புதுச்சேரி மாநிலம் காரைக்காலை நேரு நகரைச் சேர்ந்த பாபு (எ) விஜயகுமார் (42), காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் (38) ஆகியோர் வேலைபார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி மதுபான ஆலையில் இருந்து 700 மதுபாட்டில்கள், 2,000 காலி மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.


தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் பாபு, காரைக்காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட  ராமுவின் அக கா மகன் ஆவார். பாபு மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு மதுகடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. திருக்கண்ணமங்கை முத்துக்குமார் மீது  மூன்று கொலை வழக்குகளும், பெல்வின் சகாயராஜ் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், மூன்று சிலை திருட்டு வழக்குகளும், அறிவழகன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget