மேலும் அறிய

மயிலாடுதுறையில் தொடர் மழை-10 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மயிலாடுதுறை அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பெய்யும் கன மழையில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு என்பது ஆயிரம் ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அதனை தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற காரணங்களால் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.


மயிலாடுதுறையில் தொடர் மழை-10 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள 15 நாள் சம்பா பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வயல்களில் இதுபோன்ற வெள்ளம் சூழும் போதெல்லாம் அருகில் செல்லும் எல்லை வாய்க்காலில் வடிகாலாக தண்ணீர் சென்று விடும். ஆனால் திருமங்கலத்தில் இருந்து கங்கணம்புத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் செல்லும் எல்லை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. தூர் வாராப்படாத காரணத்தால் தற்போது பெய்த மழையில் தண்ணீர் செல்ல வழியின்றி வயல் முழுவதும் நீரில் மூழ்கி சம்பா சாகுபடி செய்த நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.


மயிலாடுதுறையில் தொடர் மழை-10 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

கடந்த சில ஆண்டுகளாக பெருமழை காலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் இப்பகுதி விவசாயிகள் சிலர் இந்த ஆண்டு ஒன்றிணைந்து தாங்களே 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்கள் பகுதியில் எல்லை வாய்க்காலை தூர்வாரி உள்ளனர். இருப்பினும், பல்வேறு கிராமங்களில் வழியே செல்லும் வாய்க்கால் முழுவதும் தூர்வாரப்படாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக எல்லை வாய்க்காலை தூர்வாரி அழுக தொடங்கியுள்ள தங்கள் பயிர்களை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்கள் தாமதித்தால்கூட தங்கள் பயிர்களை சிறிதளவுகூட காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றும், அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

IIT JEE Advance Results: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது - டெல்லியைச் சேர்ந்தவர் முதலிடம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Kia Carnival 2024:தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியானது கியா கார்னிவல் - என்னென்ன சிறப்புகள்!
Embed widget