மேலும் அறிய

இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய நிதி நிறுவனம் - ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

நிதி நிறுவனம் கடந்த 11.2.2021 அன்று கோடக் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவரது பெயரில் காப்பீடு செய்ததற்கான ஆதாரமாக நிதி நிறுவன ஊழியர் ஒருவரின் வாட்ஸ் அப் எண் மூலம் ஆவணத்தை அனுப்பி உள்ளனர்.

வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனத்திற்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் வீட்டிற்கு அருகில் இரும்பு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திருச்சி தில்லைநகரில் இயங்கி வரும் விஸ்தார் தனியார் நிதி நிறுவனத்தில் தனது மனைவிக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து 8 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். விஸ்தார் நிறுவனம் கடந்த 24.6.2019 அன்று முதல் தவணையாக ஜாகிர் உசேன் வங்கி கணக்கில் 6 லட்சம் ரூபாய் வரவு வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரவு வைத்துள்ளது ஆக மொத்தம் ஏழு லட்சத்து 15 ஆயிரம் மட்டும் அவரது வங்கி கணக்கில் நிதி நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.மீதமுள்ள 85 ஆயிரம் ரூபாய் குறித்து ஜாகிர் உசேன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய நிதி நிறுவனம் - ரூ.2  லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்தநிலையில் ஜாகிர் உசேன் மாதம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 9 தவணை கட்டி முடித்த பின்பு அவருக்கு திடீரென்று ஏற்பட்ட நரம்பியல் மற்றும் பராலிஸ் வியாதியின் காரணமாக கடந்த பிப்ரவரி 2020 முதல் சம்பாதிக்கும் திறனை இழந்து படுத்த படுக்கையாய் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதன் காரணமாக ஜாகிர் உசேன் தனது மனைவி மூலம் நிதி நிறுவனத்திடம் மேற்படி சிகிச்சைக்காக காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு சான்று கேட்டதற்கு அவர்கள் வழங்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக ஜாகிர் உசேன் கடன் பெற்று மருத்துவ செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் 2020இல் காப்பீடு சான்று கேட்டும் காப்பீடு தொகை பெற்று கடனை அடைக்கும் காலம் வரை என்னையோ எனது உறவுக்காரர்களையோ நிதி நிறுவனம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி வழக்கறிஞர்கள் மூலம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் நிதி நிறுவனம் அதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் நிதி நிறுவனம் கடந்த 11.2.2021 அன்று கோடக் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவரது பெயரில் காப்பீடு செய்ததற்கான ஆதாரமாக நிதி நிறுவன ஊழியர் ஒருவரின் வாட்ஸ் அப் எண் மூலம் ஜாகிர் உசேனின் நண்பர் சிவக்குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு  ஆவணத்தை அனுப்பி உள்ளனர்.


இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய நிதி நிறுவனம் - ரூ.2  லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

விஸ்தார் நிதி நிறுவனம் ரூபாய் 85 ஆயிரம் பணம் பிடித்துக் கொண்ட தேதியான 24.06.2019 அன்று காப்பீடு செய்யாமல் காலம் கடந்து மனுதாரர் நோய்வாய்ப்பட்டு சம்பாதிக்கும் திறனை இழந்து மருத்துவ சிகிச்சை பெரும் சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகு 19 மாதத்திற்கு பிறகு காப்பீடு செய்துள்ளதாக கூறி சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டு  வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பி வைத்தும் எந்தவித இழப்பீடும் பதிலும் நிதி நிறுவனம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஜாகிர் உசேன் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிதி நிறுவனம் தனக்கு 30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு  இந்த புகார் மனு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது என்றும் நிதி நிறுவனம் புகார்தாரரை ஏமாற்றும் நோக்கில் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்து தண்டனைக்குரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் புகாதாரருக்கு ரூபாய் 2 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நிதி நிறுவனத்தால் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தை நிதி நிறுவனம் புகார்தாரருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் இழப்பீடு தொகைகளுக்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பித்த தேதியில் இருந்து ஒன்பது சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ரூ 1700 சொத்து" இந்தியாவின் பணக்கார எம்எல்ஏவை விடுங்க.. ஏழை எம்எல்ஏவின் நிலையை பாருங்க
Chennai Budget 2025: சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
சென்னை பட்ஜெட்டில் இளைஞர்கள், குழந்தைகளை கவரும் அறிவிப்புகள்.. ஹைலைட்ஸ் பார்க்கலாமா.?
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
RRB Exam Cancelled: நியாயமே இல்லையா? ஆர்ஆர்பி தேர்வு திடீர் ரத்து- தெலங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அவதி!
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு..  பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
Sunita Williams: விடாமுயற்சியின் எடுத்துக்காட்டு.. பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து..
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Embed widget