மேலும் அறிய

பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு என்றால் என்ன?

நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை. தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024 ம் ஆண்டு (ராஃபி) சம்பா பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர். இதில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு,  திருவோணம், தஞ்சாவூரின் தெற்கு பகுதி ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.

அதேபோல் தஞ்சாவூர் வடக்கு பகுதி, அம்மாபேட்டை, பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.

சாகுபடி செய்ய முடியாமல் போனது

இதற்கிடையில் கடந்தாண்டு சம்பா பருவத்தின் போது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின்படி வருவாய் கிராமங்களில் 75 சதவீதம் சாகுபடி செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் அதற்கான சான்று பெற்று பயிர் காப்பீடு பிரிமியத்தை விவசாயிகள் செலுத்தினர்.

முதல்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை 

தொடர்ந்து 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பா சாகுபடியின் போது போதிய தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைந்ததாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

சோதனை அறுவடை செய்து மகசூல கணக்கீடு

அதன்படி காப்பீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியில் துறை அதிகாரிகள், வருவாய் கிராமங்களில் சோதனை அறுவடை செய்து மகசூலை கணக்கீடு செய்தனர். இதையடுத்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்கள் முன் வந்தது. அதன்படி கடந்த மாதம் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனம் சார்பில் 101 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.11.49 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இப்கோ டோக்கியோ பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 57 கிராமங்களில் உள்ள 4,759 விவசாயிகளுக்கு ரூ.9.18 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பயிர் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Embed widget