மேலும் அறிய

பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை ரூ.43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு என்றால் என்ன?

நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை. தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024 ம் ஆண்டு (ராஃபி) சம்பா பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர். இதில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு,  திருவோணம், தஞ்சாவூரின் தெற்கு பகுதி ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.

அதேபோல் தஞ்சாவூர் வடக்கு பகுதி, அம்மாபேட்டை, பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயத்தை செலுத்தியிருந்தனர்.

சாகுபடி செய்ய முடியாமல் போனது

இதற்கிடையில் கடந்தாண்டு சம்பா பருவத்தின் போது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின்படி வருவாய் கிராமங்களில் 75 சதவீதம் சாகுபடி செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலரிடம் அதற்கான சான்று பெற்று பயிர் காப்பீடு பிரிமியத்தை விவசாயிகள் செலுத்தினர்.

முதல்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை 

தொடர்ந்து 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.22.44 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பா சாகுபடியின் போது போதிய தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைந்ததாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

சோதனை அறுவடை செய்து மகசூல கணக்கீடு

அதன்படி காப்பீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியில் துறை அதிகாரிகள், வருவாய் கிராமங்களில் சோதனை அறுவடை செய்து மகசூலை கணக்கீடு செய்தனர். இதையடுத்து காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்கள் முன் வந்தது. அதன்படி கடந்த மாதம் ப்யூச்சர் ஜெனரலி காப்பீடு நிறுவனம் சார்பில் 101 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.11.49 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இப்கோ டோக்கியோ பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 57 கிராமங்களில் உள்ள 4,759 விவசாயிகளுக்கு ரூ.9.18 கோடி இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பயிர் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.43.11 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Embed widget