மேலும் அறிய

தஞ்சையில் 7 தமிழர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தஞ்சை ரயிலடியில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழரின் உயிர் காக்க தீக்குளித்து உயிரிழந்த காஞ்சிபுரம் செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சை ரயிலடியில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழரின் உயிர் காக்க தீக்குளித்து உயிரிழந்த காஞ்சிபுரம் செங்கொடியின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்கழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மத்திய அரசு, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்து,  7 தமிழர்களுக்கு நிரந்தர பரோல் வழங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாட்டு சிறையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனையை முடித்து, இயற்கை நீதி கோட்பாடுகளுக்கு மாறாக சர்வதேச மனித உரிமைகள் நீதி கோட்பாடுகளுக்கு மாறாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

தஞ்சையில் 7 தமிழர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இருந்த பொழுது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த  தமிழின உணர்வாளர் செங்கொடி தீக்குளித்து, தனது உயிரை தியாகம் செய்து 7 தமிழர்களை மரண தண்டனையில் இருந்து பாதுகாத்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள் நடைபெற்றது.  அதிமுக ஆட்சிக்காலத்தில்  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாட்டு மந்திரி சபையில் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தது.               பல  ஆண்டுகளாக மந்திரி சபை தீர்மானம்  போடப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தஞ்சையில் 7 தமிழர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பேரறிவாளனுக்கு பரோல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய  அரசு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.  

கருணாநிதி ஆட்சி காலத்தில் நக்சலைட்டாக இருந்த பெண்ணாடம் கலியபெருமாளை, நிபந்தனையற்ற பரோல் வழங்கி, வெளியில் விடப்பட்டார். அதே போல், 7 தமிழர்களையும், நிபந்தனையற்ற பரோல் வழங்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான 7 தமிழர்களை விடுதலை செய்யும் வரை தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் தொடரும். தமிழ்நாடு அரசு 7 தமிழர்களின் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர்  110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் இலங்கை அகதி முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்ய ரூ. 317 கோடி அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அறிவிப்பை வரவேற்கிறோம்.  இலங்கை அகதி முகாம்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் வாழுகின்ற இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசின் சலுகைகள் கிடைக்கின்றன வகையில் நிதியை ஒதுக்க வேண்டும்,   இந்த நிதி போதுமானதாக இல்லை. இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகத் தான் நடத்தப் பட்டு வருகின்றனர்.  இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தஞ்சையில் 7 தமிழர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

முன்னதாக காலை தஞ்சை அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் 7 தமிழர்களின் உயிர் காக்க தீக்குளித்து தியாகியான தோழர் செங்கொடியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டு, 7 பேர் விடுதலை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேவையா,  மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலாளர் ராவணன், மக்கள் அதிகாரம் மாநகரச் செயலாளர் தேவா, மாவட்ட நிர்வாகி அருள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோதண்டபாணி,  இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் ,மாவட்ட நிர்வாகி ஜோதிவேல், ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் ஆர்.பி.முத்துக்குமரன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget