மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு

’’நெல் கொள்முதலின்போது ஈரப்பத அளவை 22 சதவீகிதமாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்’’

டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று நெல் மூட்டைகளில் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோனாம்பேட்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்து கொள்முதல் செய்ய தயாராக இருந்த நெல் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு
இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு, நெல்லின் ஈரப்பதம் குறித்து இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு தென்மண்டல இயக்குனர் எம்.எஸ்.கான் தலைமையிலான மத்திய குழுவினர்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோனாப்பேட்டை, முன்னவால்கோட்டை கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதல் செய்யும் அளவு, நெல்லின் ஈரப்பதம், குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. ஆகவே நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மண்டல மேலாளர் ராஜா ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.