மேலும் அறிய

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு

’’நெல் கொள்முதலின்போது ஈரப்பத அளவை 22 சதவீகிதமாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்’’

டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று நெல் மூட்டைகளில் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோனாம்பேட்டை கிராமத்தில் மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை செய்து கொள்முதல் செய்ய தயாராக இருந்த நெல் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு
இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு, நெல்லின் ஈரப்பதம் குறித்து இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாட்டு தென்மண்டல இயக்குனர் எம்.எஸ்.கான் தலைமையிலான மத்திய குழுவினர்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சோனாப்பேட்டை, முன்னவால்கோட்டை கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதல் செய்யும் அளவு, நெல்லின் ஈரப்பதம், குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது. ஆகவே நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மண்டல மேலாளர் ராஜா ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget