மேலும் அறிய

ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி காவிரியாற்றில் தடுப்பணை பகுதியில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவனை மீட்க கூடுதல் தீயணைப்பு வீரர்களை கொண்டு தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இன்று கடுவெளி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று தங்களின் தாத்தா பாலகிருஷ்ணனுடன் கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூன்று பேரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். 


ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இதில் ஆற்றில் மூழ்கிய சிறுவன் விக்னேஷ் மீட்கப்பட்டார். தாத்தா பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் கிரிநாத்தை மீட்க தீயணைப்புத் துறையினர் 7 பேர் ஆற்றில் இறங்கி தேடி வந்தனர். நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. வெளிச்சம் போதாததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஆழம் மிகுந்த பகுதிகளில் சிறுவனை தேடும் பணி மேற்கொண்டனர்.

இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் தண்ணீர் வருவதை நிறுத்தி கூடுதல் தீயணைப்பு துறையினரை ஈடுபடுத்தி காணாமல் போன கிரிநாத்தை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் 100 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் மருவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன்பேரில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
Embed widget