மேலும் அறிய

ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி காவிரியாற்றில் தடுப்பணை பகுதியில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவனை மீட்க கூடுதல் தீயணைப்பு வீரர்களை கொண்டு தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இன்று கடுவெளி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று தங்களின் தாத்தா பாலகிருஷ்ணனுடன் கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூன்று பேரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். 


ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இதில் ஆற்றில் மூழ்கிய சிறுவன் விக்னேஷ் மீட்கப்பட்டார். தாத்தா பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் கிரிநாத்தை மீட்க தீயணைப்புத் துறையினர் 7 பேர் ஆற்றில் இறங்கி தேடி வந்தனர். நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. வெளிச்சம் போதாததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஆழம் மிகுந்த பகுதிகளில் சிறுவனை தேடும் பணி மேற்கொண்டனர்.

இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் தண்ணீர் வருவதை நிறுத்தி கூடுதல் தீயணைப்பு துறையினரை ஈடுபடுத்தி காணாமல் போன கிரிநாத்தை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் 100 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் மருவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன்பேரில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Embed widget