மேலும் அறிய

ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி காவிரியாற்றில் தடுப்பணை பகுதியில் தவறி விழுந்து காணாமல் போன சிறுவனை மீட்க கூடுதல் தீயணைப்பு வீரர்களை கொண்டு தேடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இன்று கடுவெளி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று தங்களின் தாத்தா பாலகிருஷ்ணனுடன் கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூன்று பேரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். 


ஆற்றில் விழுந்த சிறுவன்... தேடுதல் பணியை விரைவுப்படுத்த கோரி பொதுமக்கள் மறியல்

இதில் ஆற்றில் மூழ்கிய சிறுவன் விக்னேஷ் மீட்கப்பட்டார். தாத்தா பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் கிரிநாத்தை மீட்க தீயணைப்புத் துறையினர் 7 பேர் ஆற்றில் இறங்கி தேடி வந்தனர். நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. வெளிச்சம் போதாததால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஆழம் மிகுந்த பகுதிகளில் சிறுவனை தேடும் பணி மேற்கொண்டனர்.

இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் தண்ணீர் வருவதை நிறுத்தி கூடுதல் தீயணைப்பு துறையினரை ஈடுபடுத்தி காணாமல் போன கிரிநாத்தை தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் 100 க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் மருவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன்பேரில் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் ஆற்றில் விழுந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget