மேலும் அறிய

மணிப்பூரில் இருப்பது தஞ்சாவூரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது - ஆளுநர் இல.கணேசன்

’’மணிப்பூர் மாநில மக்கள் உழைப்பாளிகள். மிகவும் தொன்மையானவர்கள் குறிப்பாக கலையின் மீது  மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள்’’

நான் உளமார செய்த பிரார்த்தனை  முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது

மணிப்பூர் மாநில மக்கள் கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் எனக்கு தஞ்சையில் இருப்பது போலவே தோன்றுகிறது

மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் பேட்டி

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்றுள்ள  தஞ்சையை சேர்ந்த இல.கணேசன் தன் குடும்பத்துடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று மனமுருக சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக போலீசார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பின்னர்  இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,

நான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் சுவாமிமலை சாமிநாதசாமி எங்களது குலதெய்வம். எத்தனை முறை சுவாமிமலை கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ளேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. எனக்காக உளமாற பிரார்த்தனை செய்ய ஒரு இடம் இருக்குமானால் அது சுவாமிமலை. எல்லா  மனிதரைப் போல எனக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு.  எனவே நான் உளமார செய்த பிரார்த்தனைகளுக்கு  முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றிக்கடன் தெரிவிக்க கோவிலுக்கு வந்துள்ளேன். 

நூற்றுக்கணக்கான முறை தரிசித்து மகிழ்ந்த தஞ்சை பெரிய கோவில் அதனை மீண்டும் பார்க்க  வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக வருவேன். என்னுடைய சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த மகாராஜபுரம் தான் அங்கு என்னுடைய கிராம தேவதை உள்ளார். அவரை தரிசனம் செய்ய உள்ளேன். நேற்று சென்னையில் துணைத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இருந்தது. அதில் பங்கேற்பதற்காக வந்தேன் தற்போது தொடர்ந்து சுவாமி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்.

மணிப்பூர் இயற்கையிலேயே அழகான இடம். பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து என்று அதனை அழைக்கிறார்கள். அருமையான இடம். பிரச்சினைகள் எதுவும் இல்லை. பக்கத்தில் பர்மா தான் எல்லையாக இருக்கிறது. பர்மா நட்பு நாடாக இருப்பதால், எந்தவிதமான பிரச்சனையில் இல்லை. அம்மாநில மக்கள் உழைப்பாளிகள். மிகவும் தொன்மையானவர்கள் குறிப்பாக கலையின் மீது  மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதனால் எனக்கு தஞ்சாவூரில் இருப்பது போலவே தோன்றுகிறது. அதனால் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து பந்தநல்லூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி  தரிசனம் செய்ய சென்று விட்டார். தரிசனத்தின் போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் உடனிருந்தனர். ஆளுநர் வருகையையொட்டி சுவாமிமலை கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
Pakistan MP Crying: இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
IPL 2025: முடிஞ்சு போச்சு..! ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!
Embed widget