மேலும் அறிய

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!

’’மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள குறுவை நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆகவே நெல்லின் ஈரப்பதம் சதவிகிதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் உளர்த்துவதற்காக வைக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்கு வேலை பளுவை, இரட்டிப்பு செலவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்கவும், நெல் உளர்த்துவதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் தானியங்கி நவீன நெல் உலத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 டன் அளவிலான நெல்லை உலர்த்த முடியும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இயந்திரத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல் உலர்த்தும் இயந்திரம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் கொண்டுவரப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
டிராக்டருடன் இணைந்தபடி பஞ்சாப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நெல்லை உலர்த்த முடியும். இதன் மூலம் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை 11% ஈரப்பதத்திற்கு மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Embed widget