மேலும் அறிய

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!

’’மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள குறுவை நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆகவே நெல்லின் ஈரப்பதம் சதவிகிதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் உளர்த்துவதற்காக வைக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்கு வேலை பளுவை, இரட்டிப்பு செலவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்கவும், நெல் உளர்த்துவதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் தானியங்கி நவீன நெல் உலத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 டன் அளவிலான நெல்லை உலர்த்த முடியும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இயந்திரத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல் உலர்த்தும் இயந்திரம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் கொண்டுவரப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
டிராக்டருடன் இணைந்தபடி பஞ்சாப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நெல்லை உலர்த்த முடியும். இதன் மூலம் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை 11% ஈரப்பதத்திற்கு மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ramadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMKDurai Vaiko Resign | தூக்கியெறிந்த துரைவைகோவிழிபிதுங்கி நிற்கும் வைகோ மதிமுகவில் கோஷ்டி பூசல் | Vaiko | MDMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025: கோப்பைக்கான சண்டை இல்ல.. கேப்டன்சிக்கான சண்டை! கோதாவில் இவங்கதான்!
IPL 2025: கோப்பைக்கான சண்டை இல்ல.. கேப்டன்சிக்கான சண்டை! கோதாவில் இவங்கதான்!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
IPL 2025 LSG vs RR: ஆவேஷ்கானிடம் அடிபணிந்த ராஜஸ்தான்.. திடீர் த்ரில்லராக லக்னோ வெற்றி! ரசிகர்களுக்கு விறுவிறுப்பு!
IPL 2025 LSG vs RR: ஆவேஷ்கானிடம் அடிபணிந்த ராஜஸ்தான்.. திடீர் த்ரில்லராக லக்னோ வெற்றி! ரசிகர்களுக்கு விறுவிறுப்பு!
மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
Embed widget