மேலும் அறிய

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!

’’மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள குறுவை நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆகவே நெல்லின் ஈரப்பதம் சதவிகிதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் உளர்த்துவதற்காக வைக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்கு வேலை பளுவை, இரட்டிப்பு செலவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்கவும், நெல் உளர்த்துவதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் தானியங்கி நவீன நெல் உலத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 டன் அளவிலான நெல்லை உலர்த்த முடியும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இயந்திரத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல் உலர்த்தும் இயந்திரம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் கொண்டுவரப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
டிராக்டருடன் இணைந்தபடி பஞ்சாப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நெல்லை உலர்த்த முடியும். இதன் மூலம் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை 11% ஈரப்பதத்திற்கு மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!
கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!
வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?
வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?
சிவபாத சேகரன் முதல் மும்முடிச் சோழன் வரை! மாமன்னனின் சிறப்புப் பெயர்கள் இதோ!
சிவபாத சேகரன் முதல் மும்முடிச் சோழன் வரை! மாமன்னனின் சிறப்புப் பெயர்கள் இதோ!
திருமண்டங்குடி ரகசியம்: சோழர் காலத்து வீரமங்கைகள்! ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்!
திருமண்டங்குடி ரகசியம்: சோழர் காலத்து வீரமங்கைகள்! ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ரத்து? தயாரிப்பாளரின் நள்ளிரவு விளக்கத்தால் ரசிகர்கள் ஷாக்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
Embed widget