மேலும் அறிய

தஞ்சையில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரம் - கனமழையால் இடிந்து விழுந்தது

’’அன்னதான சத்திரத்தை மீட்டு சீரமைக்க வேண்டும், இது போல் கேட்பாரற்று கிடக்கும் மற்ற சத்திரங்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’

அன்னதான சத்திரத்தின் உள்ளே பழமையான சிவன் கோயில் கேட்பாரற்று கிடக்கின்றது. அங்கு சிவலிங்கங்கள் உள்ளிட்ட சிலைகள் மிகவும் அவல நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தஞ்சாவூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு தற்போது தொடர் மழை பெய்து வருகின்றது. தஞ்சாவூர் தாலுக்காவில் 173 மிமீ, திருவையாறு தாலுக்காவில் 122 மிமீ, பூதலுார் தாலுக்காவில் 249 மீமி, ஒரத்தநாடு தாலுக்காவில் 82 மிமீ, கும்பகோணம் தாலுக்காவில் 51.40 மிமீ, பாபநாசம் தாலுக்காவில் 150 மிமீ, திருவிடைமருதுார் தாலுக்காவில் 84.40 மிமீ, பட்டுக்கோட்டை தாலுக்காவில் 229.20 மிமீ, பேராவூரணி தாலுக்காவில் 110.40 மிமீ அளவு பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 1251.40 மிமீ அளவு பதிவாகி, மாவட்டத்திலேயே பூதலூர் தாலுக்காவில் அதிக பட்சமழை பெய்து, 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தஞ்சையில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரம் - கனமழையால் இடிந்து விழுந்தது

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தஞ்சாவூரை அடுத்த வெண்ணாற்று கரையில் உள்ள 165 ஆண்டுகள் பழமையான அன்னதான சத்திரம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு கன்று குட்டிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரழந்துள்ளன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட நீலத்தநல்லூர், கீழத் தெருவை சேர்ந்த குழந்தைசாமி மனைவி சரோஜா (58) மற்றும் இவர்களது மகன் குமார் (40)  இருவரும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக இவர்களின் குடிசை வீடு நள்ளிரவு மண் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மகன் இருவரும் பலத்த காயமயைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தஞ்சையில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரம் - கனமழையால் இடிந்து விழுந்தது

இது குறித்து வெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்கள் கூறுகையில், சரபோஜி மன்னரால் சுமார் 1856 ஆம் ஆண்டு அன்னதான சத்திரம் கட்டப்பட்டுள்ளது. காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நடைபாதைகளாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக அன்னதான சத்திரம் கட்டப்பட்டது. அதன் பின்னர், கோர்ட்டும், சத்திரம் நிர்வாகமும், பெண்கள் விடுதிகளும் இயங்கி வந்தன. அதன் பின்னர் சுமார் 15 ஆண்டுகளாக எந்தவிதமான பராமரிப்பு செய்யாமல் இருந்து விட்டனர். மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.சத்திரம் நிர்வாகம் பராமரிப்பு செய்யாததால், அந்த சத்திரத்தை சுற்றிலும், அதன் உள்ளேயும் அருகிலுள்ளவர்கள், மாடுகளை கட்டி வைத்து வந்துள்ளனர்.


தஞ்சையில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட அன்னதான சத்திரம் - கனமழையால் இடிந்து விழுந்தது

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் சத்திரத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது. இதில் வேதவள்ளி என்பவருக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகள் இடிபாடுகளில் சிக்கி இறந்து விட்டன. மிகவும் பழமையானதும், பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட அன்னதான சத்திரத்தை, மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வந்ததால், மேலும் அதிலுள்ள கட்டிடங்களின் இஸ்திரதன்மை கேள்வி குறியாகியுள்ளது. அன்னதான சத்திரத்தின் உள்ளே பழமையான சிவன் கோயில் கேட்பாரற்று கிடக்கின்றது. அங்கு சிவலிங்கங்கள் உள்ளிட்ட சிலைகள் மிகவும் அவல நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக வெண்ணாற்றங்கரையிலுள்ள அன்னதான சத்திரத்தை மீட்டு சீரமைக்க வேண்டும், இது போல் கேட்பாரற்று கிடக்கும் மற்ற சத்திரங்களை பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget