மேலும் அறிய

தில்லைத்தானத்தில் மதுபோதையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

மதுபோதையில் இரவு சுமார் 12 மணி அளவில் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் சிவன்கோயில் கோபுரத்தில் மதுபோதையில் சுமார் 70 அடி உயரம் ஏறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ளபோவதாக கூச்சல் போட்டார்

திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் முனிசாமி மகன் பரணி (45) திருமணமான இவருக்கு மதுபழக்கம் உண்டு. இவர் மதுபோதையில் இரவு சுமார் 12 மணி அளவில் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் சிவன்கோயில் கோபுரத்தில் மதுபோதையில் சுமார் 70 அடி உயரம் ஏறி அங்கிருந்து தற்கொலை செய்துகொள்ளபோவதாக கூச்சல் போட்டார். இதை பார்த்த பொதுமக்கள் திருவையாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவையாறு தீயணைப்பு நிலை வீரர்கள் அருணகணேஷ், வெங்கடேசன், கோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணிநேரம் போராடி கோபுரத்தில் ஏறி கயிற்றைகட்டி பரணிகுமாரை பத்திரமாக மேலே இருந்து கீழே இறக்கினர். இது சம்மந்தமாக மருவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருவூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சார்லிமேனிடம் பரணியை ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் , போதையில் இருந்த பரணியிடம் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.


தில்லைத்தானத்தில் மதுபோதையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,பரணி கடந்த சில நாட்களாக போதைக்கு அடிமையாகி விட்டார். தினந்தோறும் குடித்து விட்டு, வருவார். போதை அதிகமானால் ஏதேனும் விபரீதமான செயல்களில் ஈடுபடுவார். இதனையறிந்த பொது மக்கள் பரணியின் செயல்களை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் 70 அடி உயரமுள்ள சிவன் கோயில் கோபுரத்தில் திடிரென ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக கூச்சலிட்டார். அப்போது பொது மக்கள் போதையில் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கின்றார் என விட்டு விட்டனர். அதன் கோயில் கோபுரத்தை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியாகி, தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த தீயணைப்பு தறையினரும், போலீசாரும்,சமாதானம் செய்யும் விதமாக பேசினார்கள். ஆனால் பரணி போதையில் இருந்ததால், தற்கொலை செய்து கொள்ளவதாக மட்டும் பேசி வந்தார்.  அப்போது தீயணைப்பு துறை வீரர்கள், பரணிக்கு தெரியாமல் கோபுரத்தின் மீது ஏறினார்கள்.


தில்லைத்தானத்தில் மதுபோதையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கோபுரத்தின் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த பரணியை லாவகமாக பிடித்து, கீழே இறக்கினார்கள். பின்னர், பரணி கீழே அமர வைத்து, தண்ணீர் தெளித்து, குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், வீண் பிரச்சனைகள், குடும்பத்தின் நிலையை பற்றி போலீசார், அறிவுரை கூறினார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் போதை தெளிந்த பரணி தான் செய்த செயலை நினைத்து மன வேதனைப்பட்டு, வீட்டிற்கு சென்றார். குடிபோதையினால், தான் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் தற்கொலை செய்யும் அளவிற்கு துாண்டியுள்ளதை அறிந்த பொது மக்கள் மன வேதனையுடன் புலம்பினர் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget