மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் 6063 பேர் தபால் வாக்குப்பதிவு... மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 6,063 பேர் தபாலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 40% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6,063 பேர் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை  தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் "இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும்" திட்டத்தை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.
 
அதன்படி, கடந்த ஏப்.13, 14, 15 ஆகிய மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கப்பட்டது. இப்பணிகளைச்  மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. 

இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 498 முதியோர்கள் மற்றும் 187 மாற்றுத்திறனாளிகள்  என மொத்தம் 685 வாக்காளர்களுக்காக 12 குழுக்கள், கும்பகோணம் தொகுதியில் 705 முதியோர்கள் மற்றும் 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள், பாபநாசம் தொகுதியில் 484 முதியோர்கள் மற்றும் 242 மாற்றுத்திறனாளிகள் என 726 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது.

திருவையாறு தொகுதியில் 389 முதியோர்கள் மற்றும் 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 வாக்காளர்களுக்காக 11 குழுக்கள்,  தஞ்சாவூர் தொகுதியில் 634 முதியோர்கள் மற்றும் 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள், ஒரத்தநாடு  தொகுதியில் 632  முதியோர்கள் மற்றும் 143 மாற்றுத்திறனாளிகள் 775 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியோர்கள் மற்றும் 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 வாக்காளர்களுக்காக 10 குழுக்கள்,  பேராவூரணி தொகுதியில் 577 முதியோர்கள் மற்றும் 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,434  முதியோர்கள் மற்றும் 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,063 வாக்காளர்கள் இந்த வசதியைப் பெற்று உள்ளனர். 

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget