மேலும் அறிய

நெல் கொள்முதலில் ஆண்டுக்கு 500 கோடி லஞ்சம் - குற்றம் சாட்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

’’குவிண்டால் ஒன்றிற்கு லஞ்ச பிச்சையாகவும், பகல் கொள்ளையாகவும் சுமார் 100 ரூபாயில் இலிருந்து 125 வரை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு’’

நெல் கொள் முதலில் ஆண்டிற்கு 500 கோடி லஞ்சம் இலக்கு நிர்ணயித்து அப்பாவி உழவர்களிடம் பகற் கொள்ளை, வழிப்பறி செய்து, தலைமை செயலகம் முதல் தரைதளம் வரை பிரித்து,  பிணந்தின்னிக் கழுகு போல, அவர்களின்  உதிரத்தை உறிஞ்சும் உணவுத்துறை ஓநாய்கள் கண்களை மூடி கண்டுகொள்ளாமல் கூட்டு களவாணித்தனம் செய்வது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராக செயல்பட்டு வரும் தமிழக அரசின் உணவு  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆண்டுதோறும் நெல் கொள்முதல் செய்துவரும் நிலையில், கொள்முதலின் போது, உழவர்களிடம் குவிண்டால் ஒன்றிற்கு லஞ்ச பிச்சையாகவும், பகல் கொள்ளையாகவும் சுமார் 100 லிருந்து 125 வரை கட்டாயமாக்கப்பட்டு, உழவர்களிடம், ஒரு கொள்முதல் பருவத்தில் மட்டும் சுமார் 500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அப்பாவின் உழவர்களின் உதிரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால், லஞ்ச பேய்களால்  உறிஞ்சப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நெல் கொள்முதலில் ஆண்டுக்கு 500 கோடி லஞ்சம் - குற்றம் சாட்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

ஆனால் தலைமை செயலகம் முதல் தரைதளம் வரை உள்ள அலுவலர்கள், அதனை பற்றி சிறிதும் கவலைப்படாமல், கூட்டுகளவாணித்தனத்தால், கொழுத்து திரிகின்றனர். பிணந்தின்னி கழுகுகள் போல் பங்குபிரித்து, ருசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய கொள்ளையை குறித்து பல கடிதங்கள் தமிழக அரசின் தொடர்பு உடைய துறைகளுக்கு எழுதியிருந்தும், உருப்படியான, ஆக்கப்பூர்வமான, நடவடிக்கை எதுவும் இல்லாததற்கு காரணம், கிடைக்கின்ற லஞ்சத்தில் பங்கு போட்டு கொள்வதுதான் உண்மையாகிறது. யோக்கியமான,  உண்மையான, லஞ்சப்பிச்சையில் பங்க பெற விரும்பாதவர்கள் கீழ்கண்ட உண்மையான நடவடிக்கைகளுக்கு உத்திரவிடுவதோடு, செயல்படுத்திட வேண்டும்.

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சம்பா பருவத்தில் குறைந்தபட்சம் 2,000 நெல் கொள்முதல் நிலையங்கள், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள், அவர்களது உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்களது அலுவலகங்கள், வீடுகளை திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சம்பா கோடை கொள்முதல் பருவத்தில் சுமார் 2000 வழக்குகள் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரக,  மாவட்ட, மாநில, உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள்,  தகவல் பலகையில் நிரந்தரமாக அமைக்கப்படவேண்டும்.


நெல் கொள்முதலில் ஆண்டுக்கு 500 கோடி லஞ்சம் - குற்றம் சாட்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

முன்பதிவு பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். விவசாய சங்கங்கள், அரசியல் தலையீடுகள், கட்டப்பஞ்சாயத்து குறுக்கீடுகள், இடைத்தரகர்கள், விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் அனுமதிக்கக்கூடாது. நடமாடும் நெல் கொள் முதலில்  அரசு ஆர்வம் குறைவாக காணப்படுகிறது. எனவே, இது குறித்து சிபிஐ திடீர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும், லஞ்ச முறைகேடுகள் தடுக்க முடியாவிட்டால் இந்திய உணவு கழகம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என  செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன்  தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget