மேலும் அறிய

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் சேமித்த பணம் : தேடித்தேடி உதவும் காதல் இணை..!

ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக அறுசுவை உணவை நாட்டுப்புற இசை கலைஞர்கள் வழங்கி வருகின்றனர். உயிர் உள்ள வரை உணவளித்திட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருடைய மனைவி நதியா. இவர்கள் நாட்டுப்புற இசை கலைஞர்கள். இவர்கள் இருவரும் வள்ளலார் மீது கொண்ட பற்றால் ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். அவர்களுடைய வருமானத்தில் பாதியை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டு வருகின்றனர். 

ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக அறுசுவை உணவை நாட்டுப்புற இசை கலைஞர்கள் வழங்கி வருகின்றனர். உயிர் உள்ள வரை உணவளித்திட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருடைய மனைவி நதியா. இவர்கள் நாட்டுப்புற இசை கலைஞர்கள். இவர்கள் இருவரும் வள்ளலார் மீது கொண்ட பற்றால் ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். அவர்களுடைய வருமானத்தில் பாதியை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவிட்டு வருகின்றனர். 
 
காலை 8 மணிக்கு உணவு சமைக்கும் பணியை தொடங்கி மதியம் 11 மணிக்கு நிறைவு செய்கின்றனர். பல்வேறு இடங்களில் ஏழை, எளியோருக்கு உணவு அளித்த வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பு பொதுமக்களுக்கும், புறநோயாளிகளுக்கும் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கும், இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். 
இதில் சாம்பார், ரசம், மோர், கூட்டு பொரியல் சேர்த்து அறுசுவை உணவினை வழங்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 300 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் உணவு வழங்குவதற்கு முன்பாகவே உணவு வழங்கும் இடத்தில் ஏராளமான வரிசையில் நின்று உணவு பெற்றுச் செல்கின்றனர்.
 
இது குறித்து இலவசமாக உணவு வழங்கிவரும் குமார் கூறுகையில், பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே மிகப்பெரிய தொண்டு என வள்ளலார் கூறியுள்ளார். அந்த வழியில் ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக உணவு அளித்து வருகிறோம். மேலும் இந்த பணியில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. எங்கள் உயிர் இருக்கும் வரை நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்து கொண்டே இருக்க வேண்டும் என்பததான் நோக்கம் ஆசை எல்லாம். கடந்த 20 ஆண்டுகளாக உணவு அளித்தும் வரும் நிலையில் கொரோனா நேரத்தில் உணவு வழங்குவது மனதிற்கு முழு நிறைவை தருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக எந்த நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தபடாததால் தாங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து எடுத்து உணவு வழங்கி வந்தோம். ஆனால் எங்கள் பணியினை பார்த்து பலரும் உதவி வழங்கி வருவதால் தொய்வு இன்றி மக்களுக்கு உணவு அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் சேமித்த பணம் : தேடித்தேடி உதவும் காதல் இணை..!
இவர்களிடம் உணவு பெற்றுச் செல்லும் நபர்கள் கூறுகையில், “எங்கள் ஏழ்மையின் நிலை கருதி தான் நாங்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறோம். இங்கு அருகில் உள்ள உணவகங்களில் மதிய உணவு மட்டும் 100 ரூபாய் இருந்தால் மட்டுமே வாங்க முடியும், இந்தச் சூழலில் தினமும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு, இவர்கள் அறுசுவை உணவை தினமும் வழங்கி வருகிறார்கள். உணவு மிகவும் சுவையாக உள்ளது, அதிக காசு கொடுத்து வாங்கினால் கூட இவ்வளவு சுவை இருக்காது. தினமும் உணவு வழங்கி வரும் இந்த தம்பதியினருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என உணவு பெற்று செல்லும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
தஞ்சையில் டிராபிக் போலீசாரின் அதிரடி: பேருந்துகளில் இருந்து 100-க்கும் அதிகமான ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்
தொடர்ந்து நீடிக்கும் கடும் வெப்பம்: தஞ்சாவூர் பொதுமக்கள் கடும் அவதி: எப்போங்க பெய்யும் மழை!!!
தொடர்ந்து நீடிக்கும் கடும் வெப்பம்: தஞ்சாவூர் பொதுமக்கள் கடும் அவதி: எப்போங்க பெய்யும் மழை!!!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget