மேலும் அறிய

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இன்று  5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பட்டினம் பகுதி வன காவலர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள்,  கடலோர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு, திமிங்கிலம் படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இழந்துள்ளதா? அல்லது பிளாஸ்டிக் நெகிழி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளாதா? என இறந்ததற்கான காரணம் குறித்து   விசாரணை மேற்கொண்டனர்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மாதானம் கால்நடை துறை மருத்துவர் மணிமொழி கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து இறந்த திமிங்கிலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று புதுப்பட்டினம் வனத்துறையினரின் சொந்தமான காட்டில் புதைத்தனர்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

மேலும் திமிங்கிலம் பற்றி சிறு தகவல்களை காண்போம், உலகின் மிகப்பெரிய உயிரினம் திமிங்கலம். நன்கு வளர்ந்த நீலத்திமிங்கலம் கிட்டத்தட்ட 100 அடி நீளமும், சுமார் 200 டன் எடையும் கொண்ட ஒரு பிரமாண்டமான உயிரினம். ஒரு திமிங்கலத்தின் எடை சுமார் 30 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமானது. இவ்வளவு பிரம்மாண்டமாக திமிங்கலங்கள் எப்படி வளர்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. திமிங்கலங்களின் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலங்கள் வெறும் 15 அடிகளே இருந்துள்ளன. அதன் புதை படிம எலும்புகளை நாம் கைகளாலேயே தூக்கி விடலாம்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

பரிணாம வளர்ச்சியில் ஹோமோசேபியன் முதல் இன்றைய நவீன மனிதன் வரை மனித இனத்தில் உடலமைப்பிலோ, மூளை செயல்பாடுகளிலோ பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மனிதன் வாழும் இடம், இடத்தின் சீதோஷன நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 மனித இனங்கள் வாழ்கிறோம். நிறம், உடல் அமைப்பு, உடல் அளவு ஆகியவை மட்டுமே வித்தியாசம். மற்றபடி மனிதன் மனிதன் தான். உலகின் பெரும்பாலான உயிரிங்கள் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலமாக மாற்றங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால் திமிங்கலங்கள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்கிறது என்பதே ஆய்வாளர்களின் கேள்வியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தற்போது உள்ள திமிங்கலம் தான் பூமி உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப்பெரியது. இவை பிரம்மாண்ட டைனோசர்களை விடவும் பெரியது. நாம் உண்மையாகவே பிரம்மாண்ட உயிரினம் வாழும் காலத்தில் வாழ்கிறோம். எப்படி திமிங்கலங்கள் பிரம்மாண்டமான வளர்கின்றன: திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியில் ஏற்பட்ட மாற்றமே அவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 15 அடி நீளத்திலிருந்து 100 அடி நீளம் வரை வளரக்காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 4.5 மில்லியன் ஆண்டுகளிலிருந்து சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைத்த படிமங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கால இடைவெளியில் தான் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட திமிங்கலம் வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Embed widget