மேலும் அறிய

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இன்று  5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பட்டினம் பகுதி வன காவலர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள்,  கடலோர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு, திமிங்கிலம் படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இழந்துள்ளதா? அல்லது பிளாஸ்டிக் நெகிழி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளாதா? என இறந்ததற்கான காரணம் குறித்து   விசாரணை மேற்கொண்டனர்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மாதானம் கால்நடை துறை மருத்துவர் மணிமொழி கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து இறந்த திமிங்கிலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று புதுப்பட்டினம் வனத்துறையினரின் சொந்தமான காட்டில் புதைத்தனர்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

மேலும் திமிங்கிலம் பற்றி சிறு தகவல்களை காண்போம், உலகின் மிகப்பெரிய உயிரினம் திமிங்கலம். நன்கு வளர்ந்த நீலத்திமிங்கலம் கிட்டத்தட்ட 100 அடி நீளமும், சுமார் 200 டன் எடையும் கொண்ட ஒரு பிரமாண்டமான உயிரினம். ஒரு திமிங்கலத்தின் எடை சுமார் 30 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமானது. இவ்வளவு பிரம்மாண்டமாக திமிங்கலங்கள் எப்படி வளர்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. திமிங்கலங்களின் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலங்கள் வெறும் 15 அடிகளே இருந்துள்ளன. அதன் புதை படிம எலும்புகளை நாம் கைகளாலேயே தூக்கி விடலாம்.


சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

பரிணாம வளர்ச்சியில் ஹோமோசேபியன் முதல் இன்றைய நவீன மனிதன் வரை மனித இனத்தில் உடலமைப்பிலோ, மூளை செயல்பாடுகளிலோ பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மனிதன் வாழும் இடம், இடத்தின் சீதோஷன நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 மனித இனங்கள் வாழ்கிறோம். நிறம், உடல் அமைப்பு, உடல் அளவு ஆகியவை மட்டுமே வித்தியாசம். மற்றபடி மனிதன் மனிதன் தான். உலகின் பெரும்பாலான உயிரிங்கள் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலமாக மாற்றங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால் திமிங்கலங்கள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்கிறது என்பதே ஆய்வாளர்களின் கேள்வியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தற்போது உள்ள திமிங்கலம் தான் பூமி உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப்பெரியது. இவை பிரம்மாண்ட டைனோசர்களை விடவும் பெரியது. நாம் உண்மையாகவே பிரம்மாண்ட உயிரினம் வாழும் காலத்தில் வாழ்கிறோம். எப்படி திமிங்கலங்கள் பிரம்மாண்டமான வளர்கின்றன: திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியில் ஏற்பட்ட மாற்றமே அவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 15 அடி நீளத்திலிருந்து 100 அடி நீளம் வரை வளரக்காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 4.5 மில்லியன் ஆண்டுகளிலிருந்து சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைத்த படிமங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கால இடைவெளியில் தான் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட திமிங்கலம் வளர்ச்சியடைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget