மேலும் அறிய

கொல்கத்தாவிலிருந்து சரக்கு ரயிலில் 27.30 லட்சம் சாக்குகள் தஞ்சைக்கு வருகை

தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 5,460 பண்டல்களில் ஒரு பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 27 லட்சத்து 30 ஆயிரம் தற்போது வந்தடைந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொல்கத்தாவில் இருந்து 27.30 லட்சம் சாக்குகள் வந்துள்ளது. இவை கொள்முதல் நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.


கொல்கத்தாவிலிருந்து சரக்கு ரயிலில் 27.30 லட்சம் சாக்குகள் தஞ்சைக்கு வருகை

மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண்மை துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வேளாண்மை துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்து 93 ஆயிரத்து 771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். தொடர்ந்து, கடந்த (ஜூலை) 31-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 95 ஆயிரத்து 130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42 ஆயிரத்து 484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்தனர். சாக்குகள் மற்றும் லாரிகள் இல்லாத நிலையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன. மேலும் விவசாயிகள் நெல்லை சாலைகளில் குவித்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து தஞ்சை ரயில் நிலையத்திற்கு  27 லட்சத்து 30 ஆயிரம் சாக்குகள் வந்தன. இதை அனைத்தும் லாரிகள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறவை நெல் சாகுபடிக்கு 2025 - 2026  கொள்முதல் பருவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு போன மாதம் இறுதி வரை 352 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட தற்போது 291 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது இதுவரை 2,15,448 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 92ஆயிரத்து 931 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பிலுள்ள 22,517 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான 8 லட்சத்து 6 ஆயிரத்து 563 சாக்குகளும் சேமிப்புக் கிடங்குகளில் 12 லட்சத்து 73 ஆயிரத்து 628 சாக்குகளும் இருப்பில் உள்ளது மேலும் கொல்கத்தா சணல் ஆலை மூலம் மேற்கு வங்க மாநிலம் பத்ரேஸ்வர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 5,460 பண்டல்களில் ஒரு பண்டலுக்கு 500 சாக்குகள் வீதம் 27 லட்சத்து 30 ஆயிரம் தற்போது வந்தடைந்தது.

இந்த சாக்குகள் அனைத்தும் 165 தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்

மேலும் தஞ்சை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு சரக்கு ரயிலில் மூலம் மொத்தம் 54 லட்சத்து 60 ஆயிரம் சாக்கு பைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget