மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாப பலி

மயிலாடுதுறை அருகே நுகர்பொருள் வாணிபகழக்க சேமிப்புகிடங்கில் சேதமடைந்த அரிசிகளை வாய்க்கால் கரைகளில் கொட்டியதால் அதனை சாப்பிட்ட 2 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்க்காடு பகுதியில் அரசு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கான அரிசி, பருப்பு மற்றும் பல பொருட்கள் சேமித்து பாதுகாக்கப்படுகிறது. அரிசி மூட்டைகளை அடுக்கிவைக்கும் போது அவற்றை எலிகள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான மருந்துகள் அட்டியலுக்கு அடிபகுதி, சுற்றுப்பகுதிகளில் போடுவது வழக்கம். மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளுக்கு  அனுப்பியபிறகு தரையில் சிந்தி வீணாகும் அரிசிகளை கூட்டி தொழிலாளர்கள் கிடங்கிற்கு பின்புறம் உள்ள பழங்காவிரி வாய்க்கால் கரையில் கொட்டி வருகின்றனர். 


மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாப பலி

தரையில் சிந்தி சேதமடைந்த அரிசிகள் மாசுப்படுவதொடு, பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கான மருந்துகள் அதில் கலந்து இருப்பதால் அந்த அரிசிகளை வாய்க்கால் கரைகளில் கொட்டும்போது மயில் உள்ளிட்ட பறவைகள் தின்று இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாப்படுகை அண்ணாநகரை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவரின் இரண்டு கருவுற்ற பசுமாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது பழங்காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு, கரையில் கிடந்த அரிசியை திண்றுள்ளது. இதனால் செரிமான கோளாறு ஏற்பட்டு இரண்டு மாடுகளுக்கும்  உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாப பலி

அதனைத் தொடர்ந்து பாப்பாத்தி அம்மாள் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து மாடுகளுக்கு  சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. பாப்பாத்தி அம்மாள் இந்த மாடுகளை கொண்டுதான் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இதனால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இறந்த பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மயில் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்து கிடந்ததற்கு, வாய்க்கால் கரைகளில் கொட்டிய சேதமடைந்த அரிசிகளை அவைகள் உண்டதுதான் காரணம் என கூறும் அப்பகுதி மக்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


குத்தாலம் அரசு கலைக்கல்லூரிக்கு அடிப்படை வசதி, நிரந்தர கட்டடம் கோரி 80 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதிரி மங்கலத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு என்று தனி கட்டிடம் இல்லாததால் வட்டார சேவை மையத்தில் இயங்கும் வகுப்புகள் சிறிய கட்டிடம் மற்றும் இட வசதி இல்லாத காரணத்தால் சுழற்சி முறையில் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாப பலி

இந்நிலையில் அடிப்படை வசதி இல்லாத இக்கல்லூரியில் கழிப்பிட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும் மாணவர்கள் கடந்த மாதம் முதல் சாலை மறியல் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மணிபாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் வரும் 20 -ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறாக பேசிய கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாப பலி

அதனை தொடர்ந்து மாணவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 13 -ஆம் தேதிக்குள் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடு செய்து தரப்படாத காரணத்தால் இன்று கல்லூரியின் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி தலைமையில் 80 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், மாணவர்களின் நலனின் அக்கறை இல்லாத  கல்லூரியின் முதல்வரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
புதிய வரலாறு: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண் ஐஏஎஸ் ஆணையர் நியமனம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
டாக் ஆப் தி சிட்டி' ஆன லஞ்ச ஒழிப்பு சோதனை: வல்லத்தில் சிக்கிய கணக்கில் வராத பணம்
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!
திருச்சி - கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கம்: விபத்துகளைக் குறைக்க நில எல்லைகளைக் கண்டறியும் பணி தீவிரம்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Embed widget