மேலும் அறிய

144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!

நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27 ம் தேதி நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் இறங்கி வயலை சேதப்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜை ஒரு சிலர் தாக்க முயன்றனர்.


144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று 38 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அன்றைய தினமே இந்த கைது சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

இந்நிலையில், பருத்திக்குடி கிராமத்தில் 7 விவசாயிகள் இன்று தங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.  இந்த சூழலில் கடந்த 27 ம் தேதி நேரடி நெல்விதைப்பு செய்தபோது சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாலும், போராட்டக்காரர்களும் விவசாயிகளும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இருதரப்பினர் இடையே கோயில் கும்பாபிஷேக விழாவில் தகராறு ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி கூலி உயர்வு பிரச்சினையும் இருந்து வருகிறது. இதனால்  மேலும் பிரச்சினை ஏற்படாதவாறு காவல்துறையினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகாவிற்கு அறிக்கை அளித்து தடையாணை உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர். 


144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

காவல்துறை அறிக்கையின் பேரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3) ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 (3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு நேரடி நெல் விதிப்பு தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தங்கவேல் தலைமையில் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதன்காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget