மேலும் அறிய

Online Game: உயிரைப் பறித்த ஆன்லைன் கேம்..  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

டிசம்பர் 4ம் தேதி காலையில் பிரகாஷின் அம்மாவான செல்வி மருமகளை காண பொன் செல்வி வசித்து வந்த வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.

தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் 

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியிலுள்ள அம்பேத்கர் தெற்கு தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன் ஆனந்தி என்ற 26 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இரண்டரை வயதில் புகழினி என்ற பெண் குழந்தை உள்ளது. பிரகாஷ் கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

அதேசமயம் பொன் ஆனந்தியும் கடையநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவர் வெளியூரிலும், தான் உள்ளூரிலும் வேலை பார்த்து வந்த நிலையில் மகளை பாவூர்சத்திரம் அருகே வசித்து வரும் தனது பெற்றோரிடம் விட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. 

அறையில் சிக்கிய கடிதம்

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக பாவூர்சத்திரம் வந்த பொன் ஆனந்தி மீண்டும் சிவகிரிக்கு சென்று விட்டார். இப்படியான நிலையில் டிசம்பர் 4ம் தேதி காலையில் பிரகாஷின் அம்மாவான செல்வி மருமகளை காண பொன் செல்வி வசித்து வந்த வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உள்பக்கமாக பூட்டியிந்த நிலையில் செல்வி தன்னிடம் இருந்த இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றார். 

அப்போது வீட்டின் ஒரு அறையில் பொன் ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்குவதைக் கண்டு செல்வி அதிர்ச்சியடைந்து கதறி கூச்சலிட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பொன் ஆனந்தி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பொன் ஆனந்தி அறையில் கடிதம் ஒன்று போலீசாரின் தேடுதலில் சிக்கியது. 

பணத்தை இழந்ததால் விபரீதம்

அதில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு யாரும் காரணம் கிடையாது. ஆன்லைன் விளையாட்டில் நான் பணத்தை இழந்து விட்டேன். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர், பணிபுரியும் இடத்தில் போலீசார் விசாரித்தனர். இதில் தனது வேலைகளுக்கு மத்தியில் பொன் ஆனந்தி அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகளை ஆடி வந்துள்ளார். இதில் ரூ.63 ஆயிரம் வரை இழந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
TVK Vijay: விஜய்க்கு சாதகமாக உளவுத்துறை ரிப்போர்ட்.. அப்செட்டான அமித்ஷா - டெல்லியில் நடந்தது என்ன?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
ரூ.20.48 கோடி பரிசுத்தொகை! தமிழக அரசின் பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள்: முழு விவரங்கள் இதோ...
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
பெண்களுக்கு அடிக்குது ஜாக்பாட்; பொங்கல் நாளில் இனிப்பான செய்தி- உயரும் மகளிர் உரிமைத்தொகை?
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
TN govt: ’’சந்தேகமே வேணாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, முதல்வர் உறுதியாக இருக்கார்’’ கேட்டை சாத்தியதிமுக!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
LinkedIn: ஏஐ படுத்தும் பாடு; வேட்டுவைக்கும் வேலைவாய்ப்பு சந்தை? 84% பேர் தயார் ஆகவே இல்லை- அதிரடி அறிக்கை!
Iran Protest Trump: ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்; மரண தண்டனை என அரசு அச்சுறுத்தல்; ட்ரம்ப் என்ட்ரி; நடப்பது என்ன.?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
IND vs NZ: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து? சேசிங்கில் எட்டிப்பிடிக்குமா இந்தியா?
Embed widget