மேலும் அறிய

கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

150 நிரந்தர பணியாளர்களும் 100 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பணியிடங்களை நிரப்பப்பட கோரியும், காலை போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள தனியார் (ஈ.ஐ.டி பாரி) சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூரில் தனியார் (ஈ.ஐ டி பாரி)  சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில்  150 நிரந்தர பணியாளர்களும் 100 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பபட கோரியும், 8 வருடங்களாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முடிக்கப்படாமல் இருப்பதை தொடங்க கோரியும், ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் முறையான மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ கிடையாது அவற்றை ஏற்படுத்தி தரக் கோரியும்,


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

இந்த கோரிக்கைகளை வைத்து போராடிய 5 தொழிற்சங்க தலைவர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டதை கண்டித்தும் நேற்று காலை முதல் தொழிலாளர்கள் ஆலையின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை துவங்கிய போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


கரூரில் தனியார் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

இந்நிலையில் இன்று 2வது நாளாக அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடைந்தது பழமை வாய்ந்த கும்ப குளி பாலம்.

மாயனூரில் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. காவிரி கரையில் உள்ள கும்பக்குழி பாலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கரூர் வழியாக வரும் அமராவதியின் கடைமடை பகுதி என வனவாசியிலிருந்து வரும் தண்ணீர் இந்த கும்ப குளி பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது. மேலும் மாயனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வடிகால் வழியாக வரும் மழை நீரும் இந்த பாலம் வழியாக காவிரியில் கலந்து வந்தது.

இப்போது புதிய பாலம் கட்டப்பட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த  பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர் மேல மாயனூர் வனவாசி கட்டளை ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் கரூரில் இருந்து கட்டளை ரங்கநாதபுரம் மேலும் வரை காவிரி கரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் டவுன் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பாலத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.

இதனால் மாயனூர் காவிரி கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஐந்து மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாலத்தை உடனடியாக சீரமைத்தால் தான் போக்குவரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

மின் தடைக்கு நிரந்தர தீர்வு: தமிழக மின்வாரியத்தின் அதிரடி திட்டம்! விபரம் இதோ..
மின் தடைக்கு நிரந்தர தீர்வு: தமிழக மின்வாரியத்தின் அதிரடி திட்டம்! விபரம் இதோ..
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!
நலம்AI வாட்ஸ்அப் சேவை: அரசு மருத்துவமனை OP சீட்டு இனி உங்கள் விரல் நுனியில்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget