மேலும் அறிய

’மத்தவங்க பயம்தான் நம்ம பலம்!’ - அதிகாரி போல நடித்து ரூ.18 ஆயிரம் அபேஸ் செய்த பெண்!

பயத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட அந்தப் பெண், ஒரு சிலிண்டருக்கு ரூ.9 ஆயிரம் விகிதம் பணம் கொடுத்தால் தான் இந்த விவகாரத்தைச் சரிகட்டி  விடுவதாகக் கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகள் போல நடித்து பணமோசடியில் ஈடுபடுவது இங்கு புதிதல்ல. ஆனால் சென்னையில் முக்கியப் பகுதியில் நட்ட நடுப்பகலிலேயே அப்படியான மோசடி ஒன்று நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா இவர் தனது மகளுடன் தன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் ஷீலா தனது மகளுடன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அரசு அதிகாரி எனவும் உணவு வழங்கல் துறையிலிருந்து வருவதாகவும் சொல்லி பெண் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அரசு அதிகாரி எனச் சொன்னதும் ஷீலாவும் தனது வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்த அந்தப் பெண் கேஸ் கசியும் நாற்றம் வருகிறது எனச் சொல்லி நேரடியாக சமையலறைக்குச் சென்றுள்ளார். 
 
கேஸ் கசிவதைப் பார்ப்பது போல அடுப்பங்கரையை நோட்டம் விட்டவர் அங்கே இரண்டு கேஸ் சப்ளைகள் இருந்ததைப் பார்த்ததும் இரண்டு இணைப்புகள் சட்டவிரோதம் எனக் கூறி ஷீலாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். அது கிரிமினல் குற்றமென்று சொன்னதும் ஷீலாவும் அவரது மகளும் பயந்துபோய் உள்ளனர். 


’மத்தவங்க பயம்தான் நம்ம பலம்!’ - அதிகாரி போல நடித்து ரூ.18 ஆயிரம் அபேஸ் செய்த பெண்!

அவர்கள் பயத்தைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட அந்தப் பெண், ஒரு சிலிண்டருக்கு ரூ.9 ஆயிரம் விகிதம் பணம் கொடுத்தால் தான் இந்த விவகாரத்தைச் சரிகட்டி  விடுவதாகக் கூறியுள்ளார். முதலில் தயங்கிய ஷீலா பிறகு மனமாறி ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண்ணும் பிரச்னையை சரிசெய்துவிடுவதாகக் கூறி வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்த வேகத்தில் சிட்டாகத் தனது டூவிலரில் சென்றுள்ளார். 

பணம் கொடுத்த பிறகு அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஷீலா நேரடியாக உணவு வழங்கல் துறைக்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்படியாரையும் தாங்கள் அனுப்பவில்லை என துறையிலிருந்து சொன்னதும்தான் தான் 18 ரூபாய் பணமோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பது ஷீலாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசாரில் ஷீலா புகார் எழுப்பியுள்ளார். தற்போது அந்தப் போலி அரசு அதிகாரியைப் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் யாரும் அரசு அதிகாரி போல வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் தகுந்த அடையாளத்தைக் காண்பிக்கும்படி கேட்குமாரும் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையே சதுரங்கவேட்டை படத்தின் பாணியில் மக்களின் அச்சத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண் அதிகாரி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: படுமோசமான ஃபார்ம்... எப்படி தேர்வானார் ரோஹித் சர்மா? ஆராயும் ABP நாடு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget