மேலும் அறிய

AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரும் இரட்டை இலை சின்னமும் அதிமுக அவைத் தலைவர் தலையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது

அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நிலை குன்றி, காலமான நிலையில், அடுத்த அவைத் தலைவர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை ஆலோசித்து வருகிறது. AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?

புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்-சும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-சும் இன்று ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  அதிமுக அவைத் தலைவராக மதுசூதனனை  ஜெயலலிதா நியமிக்கும்போது, அப்போதைய போட்டியில் பண்ருட்டி ராமசந்திரன் மற்றும் பொன்னையன் இருந்தனர்.AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?

இப்போது பண்ரூட்டி ராமசந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெயர்கள் அவைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோரின் பெயர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?
கேபி. அன்பழகன்

பொன்னையன், செங்கோட்டையன் இருவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளால கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படாது என கூறப்படுகிறது. செம்மலையை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவரும் சேலம் மாவட்டத்தில் வருவதால் செம்மலைக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என விவரமறிந்த அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை ஒபிஎஸ் சார்ந்துள்ள, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதாலும், இவரின் பேச்சால் பல்வேறு சர்ச்சைகளை அதிமுக கடந்த காலங்களில் எதிர்கொண்டது என்பதாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் அவைத் தலைவர் பதவி கிடைக்காது என்றே தெரிகிறது.  வன்னியர் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அதிமுகவில் இல்லை என்று கூறப்பட்டு வருவதால் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெயர் இந்த பட்டியலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதே சமூகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருப்பதால் கே.பி.அன்பழகனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?
தமிழ்மகன் உசேன்

இவைமட்டுமின்றி, சட்டமன்ற தேர்தலில் பாஜக-வோடு கூட்டணி வைத்ததால்தான் ஆட்சியை பிடிக்க முடியாமல்போனது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பட்டவர்த்தனமாக பேசிய நிலையிலும், அதிமுகவில் சிறுபான்மையினருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள சூழலிலும் அதிமுக அவைத் தலைவர் பதவியை சிறுபான்மையினருக்கு அளிக்கவோ அல்லது பட்டியல் சமூகத்தை சேர்ந்தவருக்கு தரவோ அதிமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?
பொன்னையன்

அதன்படி பார்த்தால்,  சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கும் தமிழ் மகன் உசேன், பட்டியலின சமூகத்தை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகிய இருவரில் ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி அதிமுகவில் எழுந்தபோதே, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக தனபாலை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்தெடுக்கலாம் என ஒபிஎஸ் பரிந்துரை செய்திருந்த நிலையில், ஒபிஎஸ் - ஈபிஎஸ் இருவரின் ‘குட் புக்கிலும்’ இடம் பெற்றுள்ள தனபாலுக்கு அதிமுக அவைத் தலைவராக ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?

அதிமுகவை பொறுத்தவரை கூட்டங்களை கூட்டுவதற்கான, அதாவது கட்சியின் மிக முக்கியமான செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை கூட கூட்டும் அதிகாரம் படைத்தவர் அவைத் தலைவர். கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை அவைத் தலைவர்தான் படிப்பார். அதனை ஒருவர் முன்மொழிந்து, மற்றொருவர் வழிமொழிய வேண்டும். பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு கட்சியின் தலைமை போனால், அவைத் தலைவருக்கு அந்த அதிகாரம் வந்துவிடும். அவர் விரும்பினால் கட்சியை வழிநடத்த ஒரு குழுவையோ அல்லது தற்காலிகமாக ஒரு தனிநபரையோ நியமிக்கலாம். இது அதிமுக சட்ட விதிகளில் உள்ளது.


AIADMK Presidium Chairman : ’நெருங்கும் அதிமுகவின் பொன்விழா’ அடுத்த அவைத் தலைவராக ஆக போவது யார்..?

 

இதில் மிக முக்கியமாக பார்க்க வேண்டியது, ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதிமுக இரண்டாக பிரிந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின்னர், அணிகள் இணைந்தபோது அண்ணா திமுக என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே மீண்டும் வழங்கப்பட்டன.  எனவே அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது பொதுச்செயலாளருக்கோ அல்லது இப்போது இருக்கக் கூடிய ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கு இணையானது. எனவே அவைத் தலைவர் பதவியை பெற அதிமுகவில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget