மேலும் அறிய

karnataka CM Siddaramaiah: ”எங்களுக்கே தண்ணீர் இல்லை” காவிரி விவகாரத்தில் கைவிரித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

மிகக்குறைவாக மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை என, காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மிகக்குறைவாக மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை என, காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சித்தராமையா விளக்கம்:

இதுதொடர்பாக பேசியுள்ள சித்தராமையா, ”கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால்  எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தங்களுக்கே போதிய தண்ணீர் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு:

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம்:

இந்த சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாடுக்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன், ”காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை.  தமிழ்நாட்டிற்கான நீரை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தருவோம்”  என உறுதியளித்தார். இந்நிலையில் தான், கர்நாடக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்:

இந்த நிலையில், கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

முன்னதாக, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது.

இந்த விஷயத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இந்த கூட்டத்திலும், தமிழ்நாட்டுக்குரிய நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Embed widget