மேலும் அறிய

விருதுநகர் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகள்... ஆச்சரியமூட்டும் தொல்லியல் கண்டுபிடிப்பு!

30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்ததை அறிந்துகொள்ள மாணவர்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் உதவியுள்ளன. - எனவும் பெருமையுடன் தெரிவித்தார்.

கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். 

விருதுநகர் அருகே 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்த பள்ளி மாணவர்கள்
 
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்துள்ளனர். பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர் க.அன்புவேலன், தொல் பொருட்கள், கல்வெட்டுகளை அடையாளம் காண மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதன் எதிரொலியாக 5-ம் வகுப்பு முத்துமுருகன், 6-ம் வகுப்பு அக்‌ஷயா, வாணிஸ்ரீ, முகில்ராஜன், மணிகண்டன், 7-ம் வகுப்பு ராகுல், 8-ம் வகுப்பு அபி, ஜெனிகா ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகிலும், புதுக்கண்மாயிலும் கிடந்த பானை ஓடுகள், கற்கருவிகளை மேற்பரப்பாய்வில் கண்டெடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கற்கருவிகளையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,
 
ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது
 
நுண்கற்கருவிகள், இரும்புத் தாதுக்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண் கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி, இரும்பாலான அம்பு முனைகள், பாண்டி ஆட்டத்துக்குப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை இடைக்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்தவை. இடைக்கற்காலம் கி.மு.38,000 முதல் கி.மு.7,000 வரையிலானது. இப்பகுதிகளில் கிடைக்கும் செர்ட், குவார்ட்ஸ், ஜாஸ்பர் போன்ற மிருதுவான கற்களால் செய்யப்பட்ட அளவில் சிறிய நுண்கற்கருவிகள் இக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டன. இவற்றை மரக்கம்புகளின் நுனியில் பொருத்தி அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாக வேட்டையாடப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆறு, ஓடைகளின் அருகில் வாழ்ந்துள்ளனர். இவ்வூரில் ஓடை அல்லது ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது. அர்சுனா, வைப்பாறு, கிருதுமால், குண்டாறு ஆகிய ஆற்றுப்பகுதிகளில் நுண்கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். சிவப்பு பானை ஓடுகள் வரலாற்றின் இடைக்காலத்தைச் (கி.பி.300 – கி.பி.1,300) சேர்ந்தவை. ஒரு சிவப்பு பானை ஓட்டில் அச்சு பதித்தது போன்ற பூ, பறவை குறியீடுகள் உள்ளன. இவ்வூர் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்ததை அறிந்துகொள்ள மாணவர்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kanyakumari power cut: கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
கன்னியாகுமரியில் நாளை (10-06-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!
Singappen Task Force: டிரோன் மூலம் ரோந்து, அதிவேக சார்ஜ்ஷீட்; இனி பெண்களை சீண்டினால்.. சிஎம் விஜய் வார்னிங்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
Senthil Balaji : ’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
’அச்சடிச்ச மாதிரி ஒரே விண்ணப்பம்’ 400 கோடி ஊழலை செந்தில் பாலாஜி செய்தது எப்படி?
Marriage Registration : திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
திருமணப் பதிவு.! பெற்றோர் நேரில் வர உத்தரவு போடுங்க- வன்னியர் சங்கம் அதிரடி கோரிக்கை
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Embed widget