மேலும் அறிய

Villupuram: நிதி ஒதுக்கியும் கட்டப்படாத பள்ளி கட்டிடம்.. ஒரே வகுப்பறையில் முடிந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி!

விழுப்புரம் : கன்னிகாபுரத்தில் நிதி ஒதுக்கியும் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படாததால் ஒரே வகுப்பறையில் முடிந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் 2 பேர் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 2 பேர், பள்ளி மேலாண்மைக்குழு சார்பாக நியமிக்கப்பட்ட 2 ஆசிரியர்கள் என மொத்தம் 6 ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளனர்.

ஆனால் இப்பள்ளிக்கு ஒரே ஒரு கட்டிடம் உள்ளதால், அதில் 1-ம் வகுப்பு முதல் முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வீட்டின் வளாகங்களில் கல்வி பயிலும் நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துவதால் அவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு என்று தனி சமையல் அறை கிடையாது. இதனால் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் சமையல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளியில் விளையாட்டு மைதானம், கழிப்பறை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் திண்டிவனம் அதிமுக. சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, புதிய கட்டிடம் கட்ட திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தை ஒதுக்கினார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் அப்பகுதியில் உள்ளதாகவும், அங்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் பள்ளியில் கல்வி கற்பிப்பதற்கு போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இருப்பதால், ஆண்டுக்கு, ஆண்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget