மேலும் அறிய

Villupuram: நிதி ஒதுக்கியும் கட்டப்படாத பள்ளி கட்டிடம்.. ஒரே வகுப்பறையில் முடிந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி!

விழுப்புரம் : கன்னிகாபுரத்தில் நிதி ஒதுக்கியும் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படாததால் ஒரே வகுப்பறையில் முடிந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் 2 பேர் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 2 பேர், பள்ளி மேலாண்மைக்குழு சார்பாக நியமிக்கப்பட்ட 2 ஆசிரியர்கள் என மொத்தம் 6 ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளனர்.

ஆனால் இப்பள்ளிக்கு ஒரே ஒரு கட்டிடம் உள்ளதால், அதில் 1-ம் வகுப்பு முதல் முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வீட்டின் வளாகங்களில் கல்வி பயிலும் நிலை உள்ளது. மேலும் ஒரே வகுப்பறையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துவதால் அவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு என்று தனி சமையல் அறை கிடையாது. இதனால் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் சமையல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பள்ளியில் விளையாட்டு மைதானம், கழிப்பறை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் திண்டிவனம் அதிமுக. சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, புதிய கட்டிடம் கட்ட திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தை ஒதுக்கினார். இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் அப்பகுதியில் உள்ளதாகவும், அங்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் பள்ளியில் கல்வி கற்பிப்பதற்கு போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இருப்பதால், ஆண்டுக்கு, ஆண்டு மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget