மேலும் அறிய

Vikravandi bypoll 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்களித்தார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42 வது வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42 வது வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில் “எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்

விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

276 வாக்குச்சாவடி மையங்கள் 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 

276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5  - அதென்ன 2 மாத கால பயணம்..!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5 - அதென்ன 2 மாத கால பயணம்..!
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan X Post |ஆட்சியில் பங்கு.! திமுகவுக்கு திருமா செக்! 2026-ல் கூட்டணி ஆட்சியா?Singer Mano sons issue | பதுங்கிய மனோ மகன்கள்POLICE-க்கு கிடைத்த சிக்னல் நடந்தது என்ன?Priyanka Gandhi On Annapoorna | ”கேள்வியே கேட்கக் கூடாதா?பாஜகவின் தந்திரமா நிர்மலா?”சீறும் பிரியங்காElephant Subbulakshmi | உயிரிழந்த குன்றக்குடி யானை! கதறி அழுத மக்கள்! சுப்புலட்சுமியின் இறுதி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5  - அதென்ன 2 மாத கால பயணம்..!
Earth To Get New Mini Moon: பூமிக்கு கிடைக்கப்போகும் தற்காலிக நிலவு, சிறுகோள் 2024 PT5 - அதென்ன 2 மாத கால பயணம்..!
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Breaking News LIVE 15 Sep: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Neeraj Chopra: 0.01 மீட்டர் தான் வித்தியாசம் - தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா - டைமண்ட் லீக்கில் நடந்தது என்ன?
Taj Mahal: உலக அதிசயத்திற்கு வந்த சோதனை - தாஜ்மஹாலின் குவிமாடம் சேதம்? வெள்ளத்தில் மூழ்கிய தோட்டம் - நடந்தது என்ன?
Taj Mahal: உலக அதிசயத்திற்கு வந்த சோதனை - தாஜ்மஹாலின் குவிமாடம் சேதம்? வெள்ளத்தில் மூழ்கிய தோட்டம் - நடந்தது என்ன?
IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. குல்தீப் யாதவ் - அக்சர் படேலுக்கு இடம் கிடைக்குமா? ரோஹித்தின் ப்ளான் என்ன?
IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. குல்தீப் யாதவ் - அக்சர் படேலுக்கு இடம் கிடைக்குமா? ரோஹித்தின் ப்ளான் என்ன?
அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. பிரதீப் ஜான் அப்டேட் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. பிரதீப் ஜான் அப்டேட் என்ன தெரியுமா?
Embed widget