மேலும் அறிய

Vanniyar Sangam Manadu: 12 ஆண்டு காத்திருப்பு.. மாஸ்டர் பிளான் போட்ட அன்புமணி.. ட்ரோன் ஷோ முதல் டாக்குமென்ட்ரி வரை

Vanniyar Youth Conference: "நீண்ட காலம் கழித்து வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"

vanniyar sangam manadu 2025 : 12 ஆண்டுகள் கழித்து மாநாடு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிக்கு அன்புமணி ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ளார்

வன்னியர் சங்க மாநாடு - Vanniyar Sangam Manadu 

வன்னியர் சங்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் 12 ஆண்டுகளாக இந்த மாநாடு, நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வருட சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, இந்த ஆண்டு நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முதல்முறையாக வன்னியர் சங்க மாநாடு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. 

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மாநாடு திடல் 

100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை களைகட்டி உள்ளது. 

அதன் மூலம் எச்.டி. தரத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை இருக்கையில் அமர்ந்த நிலையில் தொண்டர்கள் கண்டுகளிக்க எல்இடி திரை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு முகப்பு பகுதியில் வன்னியர்களின் அடையாள சின்னமான பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் அக்னி கலசம் வைக்கப்பட்டு உள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் படத்துடன் பிரம்மாண்டமான முகப்பு தோரண வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை வசதிகள்

குறிப்பாக மாநாட்டு நிகழ்ச்சிகளை தொண்டர்கள் அமர்ந்து பார்க்க 2.5 லட்சம் இருக்கைகள், தரைவிரிப்புகள், போடப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் வசதிக்காக 500 மொபைல் டாய்லெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதிக்காக 10 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தொண்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் இ.சி.ஆர். சாலையில் பக்கிங்காம் காலவாய் ஒட்டி 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 இடங்களில் விசாலமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

 உணவு வழங்க நடவடிக்கை

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமலலபுரம் முதல் திருக்கழுக்குன்றமத் வரையில் உள்ள வன்னிய கிராம பகுதிகளில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. மாநாட்டு வாகனங்கள் பஞ்சரானால், பஞ்சர் ஒட்ட நடமாடும் பஞ்சர் வாகனங்கள் வசதி செய்யப்பட்டு உள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு 

கிழக்கு கடற்கரை சாலையில் முழுவதும் மாநாட்டு பாதுகாப்பிற்காக 5000 ஆயிரம் போலீசார், அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் திருவிடந்தை கடலில் இறங்காத வகையில் கடலோர காவலர் படை மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

வாகனங்களை ஒழுங்குபடுத்த வன்னியர் சங்கம் சார்பில் 2000 அக்னி படை வீரர்கள் கருப்பு சீருடையுடன் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் போலீசாருடன் இணைந்து இப்பணியில் ஈடுபடுவார்கள். 

மாநாடு எப்போது தொடங்கும் ?

வன்னியர் சங்க மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஆடல், பாடவல்களுடன் கலை நிகழ்ச்சிகள், வன்னிய புராண நாடகம் நடைபெறுகிறது. பிறகு மாலை 6 மணி முதல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 8 மணி அளவில் அன்புமணி ராமதாஸ் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1500 டிரோன்கள் மூலம் ஷோ 

விண்ணில் 1500 டிரோன்கள் ஒரே நேரத்தில் பறக்கவிட்டு ட்ரோன் ஷோ காட்டப்பட உள்ளது. குறிப்பாக இந்த ட்ரோன் ஷோவில் வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள், துரோபதி, காடுவெட்டி குரு, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய புகைப்படங்கள் வானில் ட்ரோன் மூலம் ஒலி, ஒளி கண்காட்சி நடக்கிறது. இதற்காக மாநாட்டு பந்தல் அருகில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 1500 டிரோன்கள் விண்ணில் பறக்கவிடப்பட உள்ளன.

இதேபோன்று ராமதாஸின் கடந்து வந்த பாதை குறித்து, சிறப்பு டாக்குமென்ட்ரி வெளியிடப்பட உள்ளது. இதில் ராமதாஸ் ஆரம்ப காலகட்டம் முதல் இப்போது வரை எப்படி, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டமைத்தார் என்பது குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளது. 

கோரிக்கைகள் என்னென்ன ?

தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துதல், 69 சதவித இட ஒதுக்கீட்டை பாதுகாத்தல், வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து சமூகத்தினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி கிழக்கு கடற்கரையில் சாலையில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பழைய மாமல்லபுரம் சாலை வழியாக பொது போக்குவத்து வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget