மேலும் அறிய

கடலூர் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பாமகவை சேர்ந்த 23 பேர் கைது

’’அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைத்து. பொது சொத்துகளை சேதப்படுத்தி. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூர்களை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு’’

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து 10.5 % இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் அறிவித்தது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கள்ளக்குறிச்சி, சேலம், என தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பெண்ணாடம் , பண்ருட்டி  மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் சுமார் 11 தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் மர்ம நபர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டது, இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


கடலூர் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பாமகவை சேர்ந்த 23 பேர் கைது

இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் வெளியிட்ட அறிக்கையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 13 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து சட்ட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த 23 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு வன்னியர்களுக்காக 10.5 இடஒதுக்கீடு தமிழக அரசு பிறபித்த அரசானையை மதுரை கிளை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது சம்பந்தமாக, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் பெரியகொமுட்டி பேருந்து நிறுத்தம், வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தம், சின்னாண்டியாங்குப்பம் இரயில்வே கேட், விருத்தாச்சலம் பேருந்து நிலையம், வயலூர் மேம்பாலம், சின்ன கொசபள்ளம் பேருந்து நிலையம், பாலகொல்லை ஆரம்ப சுகாதார நிலையம், ஓரையூர் பேருந்து நிலையம், திருமாணிகுழி பாலம், பல்லவராயநத்தம் பேருந்து நிலையம், கொடுக்கம்பாளையம் பள்ளி அருகில். அன்னகாரங்குப்பம் பாலம். சங்கொலிகுப்பம் பேருந்து நிலையம் ஆகிய 13 இடங்களில் அரசு பேருந்துகளில் கண்ணாடி உடைத்து. பொது சொத்துகளை சேதப்படுத்தி. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூர்களை ஏற்படுத்தியவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய பிறப்பித்த உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Embed widget