மேலும் அறிய

ஊரடங்கு தளர்வுகளால் கன்னியாகுமரிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் , விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மதியம் 12.15 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது. 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் உற்சாகமாக பயணம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி  முதல் அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் சுற்றுலா தலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காணவும், கடலின் அழகை ரசிக்கவும் முடியாமல் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் தவித்து வந்தனர்.

ஊரடங்கு தளர்வுகளால் கன்னியாகுமரிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!
 
மேலும், சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடைகளை நடத்தி வந்த வியாபாரிகளும் வருமானமின்றி பாதிப்புக்குள்ளாகி வந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடற்கரைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் சுற்றுலா தலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று காலை கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அதிகாலையே சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை.

ஊரடங்கு தளர்வுகளால் கன்னியாகுமரிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!
 
இருப்பினும், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் கடற்கரை சாலை, காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட் பகுதி உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர், அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சி கூடம் ஆகியவற்றையும் மிகவும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மதியம் 12.15 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது. 
 
இதனால், சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். படகுபோக்குவரத்து மாலை 4 மணி வரை நடைபெற்றது.
வழக்கம் போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
 
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள், கடற்கரை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget