மேலும் அறிய

மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் - ஓசூரில் நடந்தது என்ன?

மத்திய அரசின் கடன் பெற டோக்கன் விநியோகம் செய்தனர். ஓசூரில் பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் விசாரணை.

 
ஓசூரில் மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்திய கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
 
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் ராம்குமார் என்பவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தர விண்ணப்பம் பதிவு செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு கடன் திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டனர்.
 
அங்கு விண்ணப்பம் பதிவு செய்ய பொதுமக்களிடமிருந்து ரூ.150 முதல் ரூ.200 வரை வசூல் செய்யப்பட்டது. மேலும், கடன் உதவி பெறுவதற்கான உத்தரவாதமாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
 
இதுதொடர்பாக தகவல் அறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியங்கா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம்குமார் மற்றும் பாஜக நிர்வாகி உமா மகேஸ்வரி ஆகியோர் உரிய அனுமதியின்றி மத்திய அரசின் திட்டத்தில் கடன் பெற்றுத் தர பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தது தெரிந்தது.

மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் - ஓசூரில் நடந்தது என்ன?
 
இதையடுத்து, அங்கிருந்த டோக்கன் மற்றும் கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக பறக்கும் படையினர் ஓசூர் காவல் நிலையத்தில் ராம்குமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிமீறி டோக்கன் விநியோகம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டதாகப் புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் ராம்குமார் உள்ளிட்ட 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 
இதுதொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் பயன் பெற பொதுமக்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசு அனுமதி பெறாமல் இதுபோல உரிய அனுமதி பெறாதவர்களிடம் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம். கடன் திட்டத்துக்கு டோக்கன் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget