Tnpsc Group 2 : குரூப்-2 தேர்வு எழுதப் போறீங்களா? ஹால் டிக்கெட்டுடன் இதையும் மறக்காம எடுத்துட்டுப் போங்க!
9 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்!

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II / IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II
விழுப்புரம் மாவட்டம் மற்றும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 11 (தொகுதி - II / IIA) பதவிகளுக்கான முதன்மைத் எழுத்துத் தேர்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் 08.02.2026 (09.30 am to 12.30 pm) (Subject: Paper II (General Studies, General Intelligence, Reasoning)) (OMR Method) 229 (02.30 pm to 05.30 pm) (Descriptive method) (Subject: Paper-1 (Tamil Eligibility Test) தேர்வு 232 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள், முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 9 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு நண்பகல் 01.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
02 மணிக்கு மேல் தேர்வுக் கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket ) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தவறினால் தேர்வர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை/ கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம்/நிரந்தர கணக்கு எண் (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கைகடிகாரம் (Electronic Watches ) புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்களை (Simple Analogue Watches ) பயன்படுத்தலாம்.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.























