மேலும் அறிய

TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்தது முதலே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய பிறகு கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் மழை பரவலாக பெய்து வருகிறது. 

சென்னையில் விடாத மழை:

இந்த சூழலில், தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முன்தினம் இரவு மெல்ல மெல்லத் தொடங்கிய மழை நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. மாலையில் சற்று இடைவேளை தந்த மழை மீண்டும் இரவு தொடங்கியது. அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.

வாட்டி வதைக்கும் குளிர்:

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேகமூட்டமாகவும் காணப்படுவதாலும் குளிர் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு குளிரின் தாக்கம் இருந்து வருகிறது.  

இந்த கடும் குளிர் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காலையில் பணிக்குச் செல்பவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் செல்கின்றனர்.

மிக கனமழைக்கு வாய்ப்பு:

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், டித்வா புயல் சென்னை கடற்கரைக்கு அருகிலே உள்ளது. இதன் காரணமாகவே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

அடுத்த 18 மணி நேரத்தில் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே காற்றழுத்த தாழ்வு நிலை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் திருவள்ளூரில் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து நகராமல் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

மக்கள் அவதி:

மழை காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தி வந்தாலும் சில பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால், மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு மட்டுமின்றி டெல்டா மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இது மட்டுமின்றி மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget