மேலும் அறிய

TN Ration Shop: ரேஷன் கடைகளில் அரிசிகளுக்கு தனித்தனி ரசீது.. தமிழகத்தில் இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முதுநிலை மண்டல மண்டல மேளாளர் சார்பில் அனைத்து வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படும் போது அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2வது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பி.எச்.எச் அட்டைதாரர்கள் 

அதன்படி இன்று முதல் பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை குடும்ப அட்டை, ஏ.ஏ.ஒய் எனப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா  அட்டைதாரர்களுக்கு புதிய முறைப்படி அரிசி மட்டும் மத்திய, மாநில அரசுகளின்  ஒதுக்கீட்டின் படி 2 ரசீதாக பதிவு செய்யப்படும். பி.எச்.எச் கார்டுகளுக்கு அரிசி ஒதுக்கீடு 12 கிலோவாக இருக்கும் நிலையில், புதிய விதிகளின்படி 5 கிலோ அரிசி மத்திய அரசு சார்பிலும், 7 கிலோ மாநில அரசு சார்பிலும் வழங்கப்படும்.

ஒருவேளை அரிசி ஒதுக்கீடு 14 கிலோவாக இருந்தால்,  மத்திய அரசு 10 கிலோவும், மாநில அரசு 4 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை வழங்கும். மேலும் 16 கிலோவாக இருந்தால், 10 கிலோவை மத்திய அரசும், 6 கிலோ மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் வழங்கப்படும்.  18 கிலோவாக இருக்கும் பட்சத்தில் 15 கிலோவை மத்திய அரசும், 3 கிலோ அரிசி மற்றும் இதர பொருட்களை மாநில அரசும் வழங்கும். 

20 கிலோவாக இருக்கும்போது (அலகு 3- பெரியவர்-2, சிறியவர்-2) 15 கிலோ மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 5 கிலோ மற்றும் இதர பொருட்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிலும் வழங்க வேண்டும். அதேசமயம் 20 கிலோ (அலகு-4), 25 கிலோ, 30 கிலோ, 35 கிலோவாக இருக்கும் பட்சத்தில் அரிசி மொத்த அளவையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்கள் 

ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 கிலோ அரிசியையும் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் வழங்கி, இதர பொருட்களை மாநில அரசின் ஒதுக்கீட்டில் வழங்க வேண்டும். மேலும் இந்த அட்டைதாரர்கள் கோதுமை பெற விரும்பினால் புதிய முறைப்படி, மத்திய அரசின் தொகுப்பில் முதல் ரசீது அளவுக்கு உட்பட்ட இருப்புக்கு ஏற்றவாறு கோதுமை மற்றும் அரிசி பகிர்ந்து வழங்கலாம். 

மேலும் என்.பி.எச்.எச் எனப்படும் முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்களுக்கு எந்தவித மாற்றமுமின்றி பழைய முறையே பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறைகளை பின்பற்றாமல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டால் அதற்கு உண்டான வேறுபாட்டு தொகையை செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி ராமதாஸ் திடீர் கடிதம்...!
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget