மேலும் அறிய

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

மாவட்டங்களில் வசிக்கும் மது அருந்துவோர் குறிப்பாக குடிநோயாளிகள் எல்லைதாண்டிச்சென்று குடித்துவிட்டு திரும்புகின்றனர். அப்படி போகவர முடியாதவர்களுக்கு வாங்கிவந்து தருபவர்களும் குறுகிய கால வியாபாரமாக இதைச் செய்பவர்களும் எல்லைதாண்டி மதுவாங்கிச் செல்கின்றனர்.

கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற 11 மாவட்டங்களில் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மது அருந்துவோர் குறிப்பாக குடிநோயாளிகள் எல்லைதாண்டிச் சென்று குடித்துவிட்டு திரும்புகின்றனர். அப்படி போகவர முடியாதவர்களுக்கு வாங்கிவந்து தருபவர்களும் குறுகிய கால வியாபாரமாக இதைச் செய்பவர்களும் எல்லைதாண்டி மதுவாங்கிச் செல்கின்றனர். 

உண்மையிலேயே உரிய காரணங்கள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு, நுழைவிடச் சோதனைகள் என கெடுபிடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மது குடிப்பவர்களும் வாங்கித்தருபவர்களும் தடைகளைத் தாண்டி எப்படியாவது தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். 

கொரோனா பாதிப்பு பரவலாகக் குறைந்தபோதும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இதில், மேற்கு மண்டலத்தில் நீலகிரியிலிருந்து திருப்பூர்வரை அடுத்தடுத்து ஊரடங்கு இருப்பதால், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம்வரை சென்று மது குடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்ட ’குடி’மகன்களுக்கு அக்கம்பக்கம் சற்றே கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. 

Also Read: சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை கணிசமான மதுப்பிரியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கே செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கறம்பக்குடி, நாயக்கர்பட்டி, இரெகுநாதபுரம், கைகாட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மதுக்கடைகளில் குவிகின்றனர். 

பெரும் கும்பலாக அங்கு மதுவாங்கத் திரள்பவர்களைக் கட்டுப்படுத்துவது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. இதில் கறம்பக்குடிக்கு மதுவாங்கச் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஒருவர் இறந்தேபோனார். மூன்று பேர் காயமடைந்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்த நிலையில் இது ஒரு தனி பிரச்னையாக உருவெடுப்பதைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டில் செய்யப்பட்டதைப் போல, ஆதார் அட்டையைக் காண்பித்தால் மட்டுமே மது வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்திருக்கிறது. அந்த மாவட்ட எல்லைக்கு உள்பட்டவராக இல்லாவிட்டால், மது வழங்க முடியாதென திருப்பியனுப்ப கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க மதுப்பிரியர்களுக்கு இப்போதைக்கு எந்த வழியும் இல்லை என்றே தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
Villupuram Power cut: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Villupuram Power cut: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget