MK Stalin: தமிழக மீனவர்கள் கைது.. உடனடியாக முதல்வர் எடுத்த ஸ்டெப்! என்ன தெரியுமா?
மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விடுவிக்க கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைதுச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் கைது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்கள் இன்று காலை எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர், அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்ட மீனவர்களின் மூன்று விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகை சிறைப்பிடித்து சென்றனர்
முதல்வர் கடிதம்:
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் 03.11.2025 இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர் அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவமானது மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் வலை வீசியபோது நடந்ததாகத் சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்
மேலும் மீனவர்களின் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்






















