மேலும் அறிய

MK Stalin Speech: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழியை அழிக்கப்பார்க்கிறது பாஜக - முதல்வர் ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். 

ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று திருவள்ளூரில் திமுக சார்பில்  மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியதாவது, ”ஒவ்வொரு தமிழரும் நினைவு கூறவேண்டிய தினம் மொழிப்போர் தியாகிகள் தினம். மொழிப்போர் தியாக வரலாறை திரும்ப திரும்ப சொல்வது தமிழினம் தாழ்ந்து விடக்கூடாது என்பதற்கு தான். தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் மொழிப்போர் தியாகிகள் ஆவர். மொழிக்காக தங்களது தேக்கு மர தேகத்தினை தீக்கு தின்னக் கொடுத்தவர்கள் திமுக தொண்டர்கள்” எனவும் அவர் பேசியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழியை அழிக்கப்பார்க்கிறது பாஜக. உலகமும் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வருவதற்கு தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கை தான் காரணம். தமிழினத்துக்கு எதிரான சக்திகள் தேர்தல் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார். 

இன்றைய மொழிப்போராட்டம் என்பது, இந்தியாவை ஆள இந்திமொழிக்குத்தான் தகுதி இருக்கிறது என்ற பா.ஜ.க.வின் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம்!

நமது பண்பாட்டைச் சிதைத்து இன்னொன்றைத் திணிக்கும் நோக்கம் கொண்டவர்கள் பின்வாங்கி இருக்கிறார்களே தவிர - நாம் எந்தக் காலத்திலும் பின்வாங்கியது இல்லை! வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இனமான - மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான், இந்த வீரவணக்க நாள்!

ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்தி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து, தமிழ் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து உயிரையும் விலையாய்க் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள், இந்த நாள்!

1938-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் கைதாகி 1939-இல் சிறையில் மறைந்த நடராசனும், தாளமுத்துவும் - 1965-ஆம் ஆண்டு, தூக்கி நின்ற துப்பாக்கிக் குண்டுக்கு, மார்பு காட்டிக் காவல்துறைக்கு முன்னால் நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையில் சிவகங்கை இராசேந்திரனும் - 1965 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீயால் எரித்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, ‘மாணவமணி’ மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றோரும் - அமுது அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த கோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - இன்றைக்கும் படங்களாக நம் முன்னால், நம்முடைய உணர்வுகளில் நிறைந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய தியாகிகளை நமது முன்னோடிகளாக நாம் பெற்றிருக்கிற காரணத்தால்தான் இன்றுவரை மொழியைக் காப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget