![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TN Assembly Session: சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
![TN Assembly Session: சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு TN Assembly Session Loans to self-help groups co-operative banks increased from Rs 12 to Rs 20 lakh- I Periyasamy TN Assembly Session: சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு - அமைச்சர் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/08/5d5e6138e426e8050f099b25a494e97a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் பெரிய சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பெரிய சாமி பேசும் போது, “கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த கடன்வழங்கல் முறையில் 3 லட்சம் வரைக்கும் கடன் வாங்குபவர்களுக்கு வெறும் 7 சதவீதம் அளவே வட்டிவிகிதம் வசுலிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான நெல் உற்பத்தி நிலையம் புதுபிக்கப்படும்.
அனைத்து கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கிச்சேவை அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 569 லட்சம் செலவில் 34 வாகனங்கள் வழங்கப்படும். அந்த வாகனங்களில் பேங்கில் இருப்பது போன்ற எல்லா வசதிகளும் இருக்கும்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான பாமணி உர ஆலையில் வேப்ப விதைத்தூள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி தொடங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு சொந்தமான உயிரி உரம் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி நுண் ஊட்டச்சத்து கலப்பு உர அலகு அமைக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான கைப்பேசி செயலி உருவாக்கப்படும்.
திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு தலைமை அலுவலகம் கட்டப்படும்" உள்ளிட்ட பல அறிவிப்புகளை அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)