TN 12th Result 2025: ”பிளஸ் 2 முடிவில் அதிர்ச்சி” விழுப்புரம் மாவட்டத்திற்கு இந்த நிலையா?
Tamil Nadu 12th Result 2025: விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் என 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,533 மாணவர்களில் 9,851 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்
2024-2025 நிதியாண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்டல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.
Tamil Nadu 12th Result 2025: அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப் பள்ளிகள் - முதல் 5 மாவட்டங்கள்
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள் பின்வருமாறு...
அரியலூர் - 98.32%
ஈரோடு - 96.88%
திருப்பூர் - 95.64%
கன்னியாகுமரி - 95.06%
கடலூர் - 94.99%






















