![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரம்.. ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு..!
ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
![பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரம்.. ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு..! Tirunelveli: extracting teeth and torturing prisoners case has been registered against ASP Balveer Singh பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரம்.. ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/17/eeb24f61393a6d123c45f52ed226b0461681730286103571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருநெல்வேலியில் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 326ல் பல்வீர் சிங் மோது நெல்லை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, முதன்மைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்களை விசாரணை அதிகாரியாகவும் நியமனம் செய்து கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 9 ம் தேதி நெல்லை மாவட்டம் வருகை தந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா, மாவட்ட ஆட்சியரிடம் சார் ஆட்சியரால் முதற்கட்ட விசாரணை நடத்தி சமர்பிக்கபட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை பெற்றுகொண்டார்.
தொடர்ந்து, கடந்த 10ம் தேதி விசாரணையை தொடங்கிய அமுதா ஐஏஎஸ் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார். அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகாததால் அமுதா ஐஏஎஸ் திரும்பி சென்றார். தொடர்ந்து, 2 ம் கட்ட விசாரணை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட விசாரணையின் முதல் நாளான இன்று அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட விசாரணை அலுவலகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கினார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபரான சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யாவின், தாத்தா பூதப்பாண்டி, விகேபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் தாயார் ராஜேஷ்வரி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் 17 வயது மற்றும் 16 வயது இளம் சிறார்கள் இருவர் என மொத்தம் 5 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
என்னதான் பிரச்சனை?
நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர் சிங். இவர் பதவியேற்றதில் இருந்து அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)