மேலும் அறிய

Thrissur ATM Theft: திருடுவதில் நிபுணத்துவம்; மகாராஷ்டிராவில் 2021-லேயே பிடிபட்ட கொள்ளை கும்பல் - தலைவன் யார்?- அதிரவைக்கும் தகவல்கள்!

நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்களிடம் விடிய விடிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடந்த 2021-ல் கிருஷ்ணகிரியில் இதே கொள்ளை கும்பல் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையிடம் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது.

திரிச்சூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, வரிசையாக மூன்று ஏடிஎம்களில் 65 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கண்டெயினர் லாரியில் கேரள பார்டரை கடந்து தமிழகம் வழியாக தப்பிச் செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை நாமக்கல்லில் தமிழ்நாடு போலீஸ் சுற்றி வளைத்து, விரட்டிப் பிடித்தனர்.

குறிப்பாக கேரளாவில் நடந்த கொள்ளை சம்பவத்தை காட்டிலும், நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகம் வந்த கேரள, ஆந்திர போலிஸார்

இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டதில் உயிரிழந்த நிலையில், ஒருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 5 கொள்ளையர்களிடம் தமிழ்நாடு போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் கேரள போலீஸ் தமிழ்நாட்டுக்கு வந்து விசாரணையில் இணைந்த நிலையில், நேற்று இரவு ஆந்திர போலீசாரும் தமிழகம் விரைந்தனர்.

பிடிபட்ட 5 பேருக்குமே இந்தி மொழி மட்டுமே பேச தெரிந்ததால், காவல்துறையினர் மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகள் எல்லையான கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இதே ஹரியானா கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்மையில், ஆந்திராவின் கடப்பாவிலும் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் இதே கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது.

கேரளாவைத் தேர்வு செய்தது ஏன்?

இப்படி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கொள்ளையடித்து விட்டதால், அங்கே காவல்துறையினர் அலர்ட்டாக இருக்க வாய்பிருக்கக்கூடும், அதனால் இந்த முறை கேரளா சென்று கொள்ளையடிக்கலாம் என்று இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது.

அதற்காக 7 பேரு கொண்ட ஹரியான கொள்ளையர்கள் சென்னை வந்துள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் கண்டெயினர் லாரியில் டெல்லியிலிருந்து சென்னை வந்த நிலையில், இருவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். மீதமுள்ள மூவர் கிரெட்டா காரில் சென்னை வந்துள்ளனர். கண்டெயினரில் வந்த சரக்குகளை மீனம்பாக்கம் அருகே அன்லோட் செய்துவிட்டு, சென்னையில் தங்கி தங்களுடைய கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்த கும்பல்.

2 மணி அளவில் களமிறங்கிய கும்பல்

இந்நிலையில் கேரளாவின் திரிச்சூரில் திருட முடிவு செய்தவர்கள் சென்னையிலிருந்து கண்டெயினர் லாரியில் கிரெட்டா காரை ஏற்றிவிட்டு, திரிச்சூர் சென்றுள்ளனர். திரிச்சூர் சென்றதும், முகமுடி அணிந்துகொண்டு, காஸ் கட்டிங் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு கிரெட்டா காரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கேரளாவில் 2 மணி அளவில் இறங்கியுள்ளது.

வழக்கமாகவே எஸ்.பி.ஐ ஏடிஎம்-மில் தான் எப்போதுமே அதிக பணம் இருக்கும் என்பதால், நெடுஞ்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் எங்கெல்லாம் இருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

தனித்தனியாக எஸ்கேப் ஆகத் திட்டம்

அதிகாலை 3 மணிக்கெல்லாம், வரிசையாக அடுத்த அடுத்த ஏடிஎம்களைச் சென்று கொள்ளையடித்துவிட்டு, காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்ட கொள்ளை கும்பல், தமிழகம் வழியாக சென்னை அல்லது பெங்களூரு வரை வந்து அங்கிருந்து இந்த பணத்தை ஆள் ஆளுக்கு பிரித்துக்கொண்டு, தனி தனியாக எஸ்கேப் ஆகி ஹரியானா செல்லத் திட்டமிட்டுள்ளது.

ஆனால் கேரளா போலீஸ் கொடுத்த அலர்ட், தமிழ்நாடு போலீசின் உடனடி நடவடிக்கையால் நாமக்கல்லில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 67 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணமும், கேஸ் வெல்டிங் இயந்திரமும் பறிமுதல் செய்யப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மதியம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
EPS on Katchatheevu: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
EPS on Katchatheevu: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை“ - எடுபடுமா இபிஎஸ்-ன் வாக்குறுதி.?
TNGASA Admission: இன்னும் கல்லூரியில் சேரலையா? இதோ கடைசி வாய்ப்பு- அழைப்பு விடுத்த உயர் கல்வித்துறை!
TNGASA Admission: இன்னும் கல்லூரியில் சேரலையா? இதோ கடைசி வாய்ப்பு- அழைப்பு விடுத்த உயர் கல்வித்துறை!
இன்று முதல் காலவரையற்ற போராட்டம்; சென்னைப்‌ பல்கலைக்கழக ஊழியர்கள் அறிவிப்பு- என்ன காரணம்?
இன்று முதல் காலவரையற்ற போராட்டம்; சென்னைப்‌ பல்கலைக்கழக ஊழியர்கள் அறிவிப்பு- என்ன காரணம்?
ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்; முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு- சூடுபிடிக்கும் அரசியல் களம்!
ஓரங்கப்பட்ட ஓபிஎஸ்; முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு- சூடுபிடிக்கும் அரசியல் களம்!
பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நாகர்ஜூனா.. கன்னத்தில் பதிந்த கைரேகை.. விஜய் பட நடிகை பகிர்ந்த தகவல்
பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நாகர்ஜூனா.. கன்னத்தில் பதிந்த கைரேகை.. விஜய் பட நடிகை பகிர்ந்த தகவல்
Embed widget