மேலும் அறிய

Thrissur ATM Theft: திருடுவதில் நிபுணத்துவம்; மகாராஷ்டிராவில் 2021-லேயே பிடிபட்ட கொள்ளை கும்பல் - தலைவன் யார்?- அதிரவைக்கும் தகவல்கள்!

நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்களிடம் விடிய விடிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடந்த 2021-ல் கிருஷ்ணகிரியில் இதே கொள்ளை கும்பல் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையிடம் அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பகீர் கிளப்பியுள்ளது.

திரிச்சூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை, வரிசையாக மூன்று ஏடிஎம்களில் 65 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கண்டெயினர் லாரியில் கேரள பார்டரை கடந்து தமிழகம் வழியாக தப்பிச் செல்ல முயன்ற ஹரியானா கொள்ளையர்களை நாமக்கல்லில் தமிழ்நாடு போலீஸ் சுற்றி வளைத்து, விரட்டிப் பிடித்தனர்.

குறிப்பாக கேரளாவில் நடந்த கொள்ளை சம்பவத்தை காட்டிலும், நாமக்கல் நெடுஞ்சாலையில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு, சேசிங் சீன் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகம் வந்த கேரள, ஆந்திர போலிஸார்

இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டதில் உயிரிழந்த நிலையில், ஒருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 5 கொள்ளையர்களிடம் தமிழ்நாடு போலீசார் விசாரணையை தொடங்கினர். நேற்று மதியம் கேரள போலீஸ் தமிழ்நாட்டுக்கு வந்து விசாரணையில் இணைந்த நிலையில், நேற்று இரவு ஆந்திர போலீசாரும் தமிழகம் விரைந்தனர்.

பிடிபட்ட 5 பேருக்குமே இந்தி மொழி மட்டுமே பேச தெரிந்ததால், காவல்துறையினர் மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகள் எல்லையான கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இதே ஹரியானா கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அண்மையில், ஆந்திராவின் கடப்பாவிலும் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் இதே கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது.

கேரளாவைத் தேர்வு செய்தது ஏன்?

இப்படி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கொள்ளையடித்து விட்டதால், அங்கே காவல்துறையினர் அலர்ட்டாக இருக்க வாய்பிருக்கக்கூடும், அதனால் இந்த முறை கேரளா சென்று கொள்ளையடிக்கலாம் என்று இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது.

அதற்காக 7 பேரு கொண்ட ஹரியான கொள்ளையர்கள் சென்னை வந்துள்ளனர். இரண்டு கொள்ளையர்கள் கண்டெயினர் லாரியில் டெல்லியிலிருந்து சென்னை வந்த நிலையில், இருவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். மீதமுள்ள மூவர் கிரெட்டா காரில் சென்னை வந்துள்ளனர். கண்டெயினரில் வந்த சரக்குகளை மீனம்பாக்கம் அருகே அன்லோட் செய்துவிட்டு, சென்னையில் தங்கி தங்களுடைய கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்த கும்பல்.

2 மணி அளவில் களமிறங்கிய கும்பல்

இந்நிலையில் கேரளாவின் திரிச்சூரில் திருட முடிவு செய்தவர்கள் சென்னையிலிருந்து கண்டெயினர் லாரியில் கிரெட்டா காரை ஏற்றிவிட்டு, திரிச்சூர் சென்றுள்ளனர். திரிச்சூர் சென்றதும், முகமுடி அணிந்துகொண்டு, காஸ் கட்டிங் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு கிரெட்டா காரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கேரளாவில் 2 மணி அளவில் இறங்கியுள்ளது.

வழக்கமாகவே எஸ்.பி.ஐ ஏடிஎம்-மில் தான் எப்போதுமே அதிக பணம் இருக்கும் என்பதால், நெடுஞ்சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் எங்கெல்லாம் இருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

தனித்தனியாக எஸ்கேப் ஆகத் திட்டம்

அதிகாலை 3 மணிக்கெல்லாம், வரிசையாக அடுத்த அடுத்த ஏடிஎம்களைச் சென்று கொள்ளையடித்துவிட்டு, காரை கண்டெய்னரில் ஏற்றிக்கொண்ட கொள்ளை கும்பல், தமிழகம் வழியாக சென்னை அல்லது பெங்களூரு வரை வந்து அங்கிருந்து இந்த பணத்தை ஆள் ஆளுக்கு பிரித்துக்கொண்டு, தனி தனியாக எஸ்கேப் ஆகி ஹரியானா செல்லத் திட்டமிட்டுள்ளது.

ஆனால் கேரளா போலீஸ் கொடுத்த அலர்ட், தமிழ்நாடு போலீசின் உடனடி நடவடிக்கையால் நாமக்கல்லில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 67 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணமும், கேஸ் வெல்டிங் இயந்திரமும் பறிமுதல் செய்யப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மதியம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Donald Trump: அமெரிக்க கல்வித் துறையையே மூட முடிவு செய்த ட்ரம்ப்; அதிர்ச்சிப் பின்னணி இதுதான்!
Stalin Vs EPS: ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
ஓடாதீர்கள்.!! நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள்.. ஆவேசமான இபிஎஸ்-ஐ அழைத்த ஸ்டாலின்...
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
IIT Madras: விதிகள் எல்லோருக்கும்தானே; ஐஐடி சென்னையில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; ஆர்டிஐயில் அம்பலம்- அதிர்ச்சித் தகவல்!
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
BCCI CT Prize: கொட்டிக் கொடுத்த பிசிசிஐ..! இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு - சாம்பியன்ஸ் ட்ராபி பட்டம்
Senthil Balaji's Plan: டாஸ்மாக் வழக்கிலிருந்து எஸ்கேப்பா.? டெல்லியில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.? பலே பிளான்...
டாஸ்மாக் வழக்கிலிருந்து எஸ்கேப்பா.? டெல்லியில் யாரை சந்தித்தார் செந்தில் பாலாஜி.? பலே பிளான்...
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
DMK : “மீண்டும் திமுகவில் அதிரடி - விரைவில் மாற்றப்படப்போகும் மா.செ.க்கள்” யார், யார்..?
DMK : “மீண்டும் திமுகவில் அதிரடி - விரைவில் மாற்றப்படப்போகும் மா.செ.க்கள்” யார், யார்..?
Modi Bill Gates Meet: பிரதமர் மோடி, பில் கேட்ஸ் ஒருவருக்கொருவர் புகழாரம்.. சந்திப்பில் என்ன பேசினார்கள் தெரியுமா.?
பிரதமர் மோடி, பில் கேட்ஸ் ஒருவருக்கொருவர் புகழாரம்.. சந்திப்பில் என்ன பேசினார்கள் தெரியுமா.?
Embed widget