மேலும் அறிய

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கா..? ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி சொன்னது இதுதான்!

ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் தாமதம் செய்யவில்லை என ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது முழு அறிக்கையை அரசிடம் இன்று தாக்கல் செய்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழ்நாடு முதல்வர் அவர்களும், தமிழ்நாடு அரசும் இந்த ஆணையத்தை தொடரலாம் என்று சொன்னதுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். முதலில் ஆறுமுகசாமி ஆணையம் நீதிமன்றம் போல் செயல்பட்டதாக உச்சநீதிமன்றம் கூறியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா உடல்நிலை எப்படி இருந்தது என்பதில் தொடங்கி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரண விசாரணையில் ஆணையம் தாமதம் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆறுமுகசாமி, மொத்த விசாரணையுமே அது தொடர்பானதுதான். அந்த அறிக்கையைத்தான் தற்போது அரசிடம் அளித்துள்ளோம். அறிக்கையை வெளியிடலாமா என்பதை அரசுதான்முடிவு செய்யும். ஆங்கிலத்தில் 500 பக்கமும், தமிழில் 608 பக்கமும் தாக்கல் செய்யப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

தொடர்ந்து, ”ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவந்த விதத்தில் சந்தேகதன்மையான எதுவும் இல்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்யவில்லை. அதேபோல், சசிகலா நேரில் வர தயாராகயில்லை என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் அவரை நேரில் அழைக்கவில்லை “ என்றார். 

எய்ம்ஸ் அறிக்கை : 

ஜெயலலிதா சிகிச்சையை நேரில் பார்வையிட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு இதுவரை 6 அறிக்கைகளை அளித்துள்ளது. அதனையும் ஜெயலலிதா இறந்து 3 மாதங்களுக்கு பிறகே முதல் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை அளித்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

அறிக்கை தாக்கல் : 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், இன்று (27.08.2022) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார். இந்த அறிக்கையை 29.08.2022 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் முனைவர் திரு. எஸ்.இரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget