மேலும் அறிய

Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் கூடுதல் பணம் வசூலிப்பது தடைசெய்யப்படும்.

கோடிகளை கொட்டும் டாஸ்மாக்

நவீன காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பல நூறு கோடி ரூபாய் வருவாய் தினந்தோறும் குவிந்து வருகிறது.எனவே தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெரிதும் உதவும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 கோடி ரூபாயை வருவாய் தாண்டும். 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்

இருந்த போதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பிரியர்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு முடிவே கிடைக்காமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம், கடும் கட்டுப்பாடுகள் என விதித்தாலும் 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி மதுபான விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டறியமுடியும்.

டாஸ்மாக் டிஜிட்டல் முறை அமல்

அந்த வகையில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எம்.ஆர்.பி விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஆய்வானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டைனமிக் க்யூஆர் கோடு அறிமுகம்

முதல் கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள 2 கடைகள் உள்பட மாநிலத்தின் 5 மண்டலங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் கடைகளிலும், அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் டைனமிக் க்யூஆர் கோடுகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுபிரியர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிப்பது தடுக்கவாய்ப்பு உருவாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget