மேலும் அறிய

Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் கூடுதல் பணம் வசூலிப்பது தடைசெய்யப்படும்.

கோடிகளை கொட்டும் டாஸ்மாக்

நவீன காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பல நூறு கோடி ரூபாய் வருவாய் தினந்தோறும் குவிந்து வருகிறது.எனவே தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெரிதும் உதவும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 கோடி ரூபாயை வருவாய் தாண்டும். 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்

இருந்த போதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பிரியர்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு முடிவே கிடைக்காமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம், கடும் கட்டுப்பாடுகள் என விதித்தாலும் 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி மதுபான விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டறியமுடியும்.

டாஸ்மாக் டிஜிட்டல் முறை அமல்

அந்த வகையில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எம்.ஆர்.பி விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஆய்வானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டைனமிக் க்யூஆர் கோடு அறிமுகம்

முதல் கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள 2 கடைகள் உள்பட மாநிலத்தின் 5 மண்டலங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் கடைகளிலும், அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் டைனமிக் க்யூஆர் கோடுகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுபிரியர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிப்பது தடுக்கவாய்ப்பு உருவாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Embed widget