மேலும் அறிய

Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் கூடுதல் பணம் வசூலிப்பது தடைசெய்யப்படும்.

கோடிகளை கொட்டும் டாஸ்மாக்

நவீன காலத்தில் மது குடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பல நூறு கோடி ரூபாய் வருவாய் தினந்தோறும் குவிந்து வருகிறது.எனவே தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெரிதும் உதவும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 கோடி ரூபாயை வருவாய் தாண்டும். 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல்

இருந்த போதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பிரியர்களிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் அதற்கு முடிவே கிடைக்காமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட், இடமாற்றம், கடும் கட்டுப்பாடுகள் என விதித்தாலும் 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி மதுபான விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டறியமுடியும்.

டாஸ்மாக் டிஜிட்டல் முறை அமல்

அந்த வகையில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எம்.ஆர்.பி விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான ஆய்வானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும்.எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டைனமிக் க்யூஆர் கோடு அறிமுகம்

முதல் கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள 2 கடைகள் உள்பட மாநிலத்தின் 5 மண்டலங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக  சென்னையில் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் கடைகளிலும், அடுத்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் டைனமிக் க்யூஆர் கோடுகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுபிரியர்களிடம் இருந்து கூடுதலாக பணம் வசூலிப்பது தடுக்கவாய்ப்பு உருவாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Embed widget