Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் மரணம்
சிவகங்கை அஜித்குமார் மரணம்; சிறப்பு விசாரணை தேவை - தவெக தலைவர் விஜய்
சிவகங்கை லாக்கப் மரணம்; திமுக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்
சிவகங்கை திருப்புவனத்தில் காவல்துறை உயிரிழந்த விவகாரத்தில் காவலாளி உயிரிழப்பு - 5 காவலர்கள் கைது
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 58 குறைவு - வியாபாரிகள் நிம்மதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 70 ஆயிரம் அடியாக அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்த இலங்கை
பாஜக எந்த கட்சியையும் கபளீகரம் செய்யவில்லை; திமுக தான் தன் கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்கிறது - தமிழிசை சவுந்தர்ராஜன்
கடந்த ஆட்சியில் அரசாங்கம் நாட்களை வீணடித்தனர்; மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை - புதுச்சேரி முதலமைச்சர்
சேலத்தில் பாலியல் வழக்கில் கைதான நபர் சிறையில் இருந்தபடி செல்போனில் பேசியது அம்பலம்
பெரும்பாக்கத்தில் டீக்கடையில் நின்றிருந்தவரை கத்தியால் வெட்டிய விவகாரம் - 4 பேர் கைது
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன பதவிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு
வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்கும் - அமைச்சர் சிவசங்கர்
தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்வு





















